Sunday, February 03, 2013

விஸ்வரூபமாகும் மாலி - மதமும் மத அடிப்படைவாதமும்

விஸ்வரூபம் படம் இஸ்லாமியரை இழிவு படுத்துவதாக மாபெரும் போராட்டம் தமிழகத்தில்  வெடித்திருந்த நிலையில் அது இஸ்லாமியருக்கு எதிரான படம் அல்ல என்று பலர் கூறி வருகின்றனர். அந்த படம் உண்மையான இஸ்லாமிய மதத்தினரையும் மத அடிப்படை வாதிகளையும் சரியாக வேறு படுத்தி காட்டவில்லை என்று முன் பதிவில் கூறி இருந்தேன்.


மாலி நாட்டில் நடக்கும் மத தீவிரவாதத்துக்கு எதிரான போர் பற்றி நியூயார்க் டைம்ஸில் ஒரு செய்தி வந்திருந்தது.அது அனைவரும் படிக்க வேண்டிய செய்தி. அதை படித்தால் யார் மதவாதி, யார் மத அடிப்படைவாதி என்று தெரிந்து விடும்.

இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் உண்மையான இஸ்லாமியர்களை கொடூரமாக கொல்வதால் தான் பல்லாயிரகணக்கான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. பல்வேறு இஸ்லாமிய நாடுகள் முக்கியமாக ஈராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் வாரந்தோறும் சில நூறு இஸ்லாமியர்களாவது இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் கொல்லபட்டு வருகிறார்கள்.

பாகிஸ்தானில் பெரும்பாலான குண்டு வெடிப்புகள் நடைபெறுவது இஸ்லாமிய வழிபாட்டு தலங்களில் தான். உண்மையில் சொல்ல போனால் தற்போது இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் இஸ்லாமியரால் நிம்மதியாக வழிபாட்டு தலத்துக்கு சென்று வழி படுவதோ, மதம் சார்பான திருவிழாக்களை கொண்டாடுவதோ இயலாத நிலையில் உள்ளனர்,மத அடிப்படைவாதிகளை வளரவிட்டால் நாட்டில் என்ன நடக்கும் என்பதற்கு இஸ்லாமிய நாடுகளே சிறந்த உதாரணம்.பாகிஸ்தானின் Dawn போன்ற பத்திரிக்கைகளை தினமும் படித்தால் இது போன்ற உண்மைகள் தெரியவரும்.

இனி மாலியில் நடக்கும் நிகழ்ச்சிக்கு வருவோம்.மாலியில் வாழும் இஸ்லாமியர்கள் வன்முறையை விரும்பாத ஆனால தீவிரமாக இஸ்லாமிய மதத்தை கடை பிடிக்கும் மக்கள். பல நூறு ஆண்டுகளாக பல தடைகளையும் தாண்டி தொடர்ந்து இஸ்லாத்தை தீவிரமாக பின் பற்றி வருகின்றனர். ஆனால் அவரகளுக்கு வன்முறையை அடிப்படையாக கொண்ட இஸ்லாமிய பிரிவில் நம்பிக்கை இல்லை.தற்போது ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வெளியேறிய சில  தீவிரவாதிகள் தங்கள் சனி பார்வையை மாலி பக்கம் திருப்பினர்.கடந்த 10 மாதமாக  தங்கள் வெறியாட்டத்தை நடத்தினர்.

அங்கு நடப்பதை மாலி மக்கள் கூறுவதை பாருங்கள்
http://www.nytimes.com/2013/02/01/world/africa/timbuktu-endured-terror-under-harsh-shariah-law.html?pagewanted=all&_r=0
It started with the women.If they showed their faces in the market they would be whipped. The local men grew angry at attacks on their wives, so they organized a march to the headquarters of the Islamic police, who had installed themselves in a bank branch.

The Islamists greeted the protesters by shooting in the air. Many fled, but a small group, including Mr. Tandina, insisted that they be heard.

A young, bearded man came out to meet them. Much to Mr. Tandina’s surprise, he recognized the Islamic police official. His name was Hassan Ag, and before the fighting began he had been a lab technician at the local hospital.

“When I knew him he was cleanshaven, and he wore ordinary clothes of a bureaucrat,” Mr. Tandina said.
 
Now he was dressed in the uniform of the Islamist rebellion: a tunic, loose trousers cut well above the ankle, in imitation of the Prophet Muhammad, and a machine gun slung across his shoulder.

“I told him our women were being harmed,” he said.

Mr. Ag was unmoved.
 
“This is Islamic law,” he said, according to Mr. Tandina. “There is nothing I can do. And the worst is yet to come.”

அதை விட முக்கியமானது

“What they call Islam is not what we know is Islam,” said Dramane Cissé, the 78-year-old imam at one of the city’s biggest and oldest mosques. “They are arrogant bullies who use religion as a veil for their true desires.”

அங்கெல்லாம் சட்டத்தை நிலை நிறுத்த காவல்துறை இல்லை.பழம் பெருமை வாய்ந்த இஸ்லாமிய வழிபாட்டிடங்களை இடித்து தரை மட்டமாக்க தொடங்கி விட்டனர்.ஏன் இதை குறிப்பிடுகிறேனென்றால் தமிழகத்திலும் அது போன்ற ஒர் சிலர் கிளம்பியுள்ளனர். உதாரணமாக  தமிழகத்தில் பல நூறு ஆண்டுகளாக இருந்த இஸ்லாமிய வழிபாட்டிடங்களை அவமதிக்கும் வகையிலும் போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.சிலர் புனிதமான நாகூர் இஸ்லாமிய வழிபாட்டிடத்தை அழிப்போம் என்றெல்லாம் கூறுகிறார்கள்.இன்று மாலியில் உள்ள மத தீவிரவாதிகள் செய்வது போல் தமிழகத்தில் பல நூறு ஆண்டுகளாக வன்முறையை விரும்பாமல் அமைதியாக ஆனால் தீவிரமாக இஸ்லாத்தை கடைபிடிப்பவர்களை அவமதிக்கிறார்கள்

பொதுவாக நாகரீகம் அடைந்த நாடுகளில் தங்களது நம்பிக்கைக்கு ஏற்ப மத வழிபாடுகளை  பின்பற்றுவார்கள்.  அடுத்தவர்களது வழிபாட்டு முறையில் தலையிட மாட்டார்கள்.இது நாள் வரை அந்த நிலை தமிழகத்தில் நீடித்து வருகிறது.அதே நிலை நீடிப்பது தான் அனைவருக்கும் நலம்.

விஸ்வரூபம் போன்ற படங்கள் எதிர்ப்பு என்ற பெயரில் தற்போது வளர்ந்து வரும் மத அடிப்படைவாதிகள் உணர்வு பூர்வமாக வெறியூட்டி அமைதியான இஸ்லாமியர்களை பாதை மாற்றாமல் இருந்தால் சரி தான்.

திரைபடத்தில் தமிழக இஸ்லாமியரை அவமதித்ததை தீவிரமாக எதிர்த்து போராடிய இஸ்லாமிய இயக்கத்தினர், பல நூறு ஆண்டுகளாக தமிழக முஸ்லீம்களால் வழிபட்டு வரும் வழிபாட்டு தலங்களையும், அங்கு தொழும் இஸ்லாமியர்களையும் நிஜ வாழ்க்கையில் அவமதிக்கும் கூட்டத்தினரை எதிர்த்து மாநிலம் தழுவிய தீவிர போராட்டத்தை முன்னெடுப்பது இன்றைய காலத்தின் கட்டாயம் என்றால் மிகையாகாது.

 

2 comments:

வவ்வால் said...

மத அடிப்படை வாதம் ,மதம் வேறுபாட்டை நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்.

தமிழ்நாட்டில் மத அடிப்படைவாதிகள் தாங்கள் தான் உண்மையான மார்க்கவாதிகள் அதை நம்பாதவர்கள் பெயருக்கு மார்க்கவாதிகள் எனக்கிளம்பி இருக்கிறார்கள்,அவர்களை புறக்கணிக்கவேண்டும்,ஆனால் பொதுவான இஸ்லாமிய மக்களோ அப்படி செய்தால் நம்மையும் போலினு சொல்லிடுவாங்களோனு பயப்படுறாங்க.

சதுக்க பூதம் said...

வாங்க வவ்வால்.
//தமிழ்நாட்டில் மத அடிப்படைவாதிகள் தாங்கள் தான் உண்மையான மார்க்கவாதிகள் அதை நம்பாதவர்கள் பெயருக்கு மார்க்கவாதிகள் எனக்கிளம்பி இருக்கிறார்கள்,அவர்களை புறக்கணிக்கவேண்டும்,ஆனால் பொதுவான இஸ்லாமிய மக்களோ அப்படி செய்தால் நம்மையும் போலினு சொல்லிடுவாங்களோனு பயப்படுறாங்க.//
சரியாக சொன்னீர்கள். தமிழக வஹாபிக்கள் தங்கள் தமிழக முஸ்லீம் எதிர்ப்பு கருத்தை சொல்வதோடு நிறுத்தி விட்டால் நல்லது. பாகிஸ்தான், மாலி போல் மசூதிகளில் கொண்டு வைத்து உயிர் கொலை செய்யாமல் இருந்தால் நல்லது.