Sunday, January 27, 2013

விஸ்வரூபம் - பிரியாணிக்கு ஆப்பு வைத்தது யார்?

விஸ்வரூபம் படத்தை பார்க்க முதலில் விருப்பம் இல்லாவிட்டாலும்,கமலின் வருகையாலும் இந்த படம் சமீப காலமாக ஏற்படுத்திய சர்ச்சை காரணமாக என்ன தான் இருக்கிறது இந்த படத்தில் என பார்க்கலாம் என்று முடிவு செய்திருந்தேன். படத்தை பற்றி பல பேர் விமர்சன்ம் எழுதியாகி விட்டது. அதை படித்தால் படத்தின் கதை என்ன என்று தெரிந்திருக்கும்.

கமலின் நடிப்பு பற்றி ஒன்றும் சொல்ல தேவையில்லை.பழைய கதையையும் தற்போது நடக்கும் கதையையும் mix  செய்து parallel ஆக  காட்டுவது அந்த அளவு ஒட்டி செல்ல வில்லை என்றே தோன்றுகிறது.படம் நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம். படத்துடன் ஒத்து போகின்ற வன்முறை நிறைய இருக்கிறது. நிச்சயம்  Adult Only தான். ஹாலிவுட் படங்கள் நிறைய பார்த்து அது போல் எடுக்க வேண்டும் என்று நினைத்திருப்பதால் நிச்சயம் ஓரளவிற்கு ஆங்கில படத்துக்கு இணையாக எடுத்துள்ளார்.  ஆப்கான் செட்கள் பிரமிக்க தக்க வகையில் இருந்தன( செட்கள் அல்லது அது போன்ற பகுதியில் எடுக்க பட்டதா என்று தெரியவில்லை).கொஞ்சம் விறிவிறுப்பு குறைவு.மற்ற படி அதை திரைப்பட பார்வையில் பார்த்தால் படம் நன்றாகவே உள்ளது. (ஆனால் திரை சரித்திரத்தில் பொன்னெழுத்தால் பொறிக்கபட வேண்டிய படம் எல்லாம் இல்லை).அதிகம் ஹாலிவுட் படம் பார்ப்பவர்களுக்கு இது மிகவும் பிடித்த படமாகவே இருக்க வாய்ப்பு உள்ளது.

படத்தின் போக்கு டாக்குமென்ட்ரி போல் உள்ளது. இந்த படத்தை சாதாரண மக்கள் பொருமையாக பார்ப்பார்களா என்பது சந்தேகமே.எந்த ஒரு எதிர்ப்பு, பரபரப்பும் இல்லாமல் இந்த படத்தை வெளியிட்டிருந்தால் ஒரு சில வாரம் மட்டுமே ஓடியிருக்க வாய்ப்பு உள்ளது. DTHல் முதலில் வெளியிட நினைத்திருக்க இது ஓர் காரணமாக கூட இருக்கலாம்.

இனி படத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு சலசலப்பு பற்றி பார்ப்போம்.ஹே ராம் படத்தின் மூலம் கமல் தெளிக்க முயன்ற இஸ்லாமிய வெறுப்பில் 10% கூட இந்த படத்தில் இல்லை.ஆனால் இந்த படத்தின் கதைகளம் மற்றும் போக்கின் காரணமாக இதை விவாதிப்பது கடினமான செயல்.இந்த கதை களத்தில் தமிழ் படம் தேவைதானா? என்றால் தேவை இல்லை என்பது என் தனி கருத்து. ஆனால் இது கூடாது என்று யாரும் சொல்ல முடியாது.

1. முதலாவதாக இந்த படத்தில் தமிழக முஸ்லீம்களை அவமதித்துள்ளதாக முக்கிய குற்றசாட்டை வைத்துள்ளார்கள். இந்த படம் முழுமையும் ஆப்கான், அமெரிக்க சூழலில் எடுக்க பட்டுள்ளது.எனக்கு தெரிந்து ஒரே ஒரு இடத்தில் மட்டும்  அது சம்பந்தமான காட்சி வருகிறது. (அதை கூட ஒலியை மறைத்து தடுத்திருக்களாம். கதையின் போக்கை அது பாதிக்க போவது இல்லை)ஆப்கான் தீவிரவாத குழுவின் தலைவன் தமிழில் பேசுவதற்கான காரணம் இரு வருடங்கள் கோவை,மதுரை,அயோத்தியா மற்றும் இன்னொரு நகரில் தங்கியுள்ளதாக  கூறுகின்றான். (ரோஜா படத்தில் காஷ்மீர் தீவிரவாதி தமிழில் பேச காரணம் தமிழ்நாடு வேளாண் கல்லூரியில் படித்தது என்று கூறியிருப்பான்). இது ஒன்றும் தமிழக முஸ்லீம்களை இழிவு படுத்துவது போல் இருப்பதாக தெரியவில்லை.
இந்த படத்தை தமிழகத்தில் அனைவரும் பார்க்கும் பட்சத்தில், இந்த குற்றசாட்டை முக்கிய குற்றசாட்டாக கூறியதன் மூலம் முஸ்லீம்
இயக்கங்களின் நம்பகதன்மை மற்றும் அவர்களின் நோக்கம் பற்றி சந்தேகம் எழ வாய்ப்புள்ளது. அவர்களுடைய மற்ற குற்றசாட்டில் கூட சில நியாயம் உள்ளது. ஆனால் மேற்சொன்ன குற்ற சாட்டில் நியாயம் இல்லை. (பிற மொழியில் இந்த படத்தை வெளியிடும் போது அந்த மாநில ஊர்களின் பெயரை சொலவது போல் இருக்க வாய்ப்புண்டு.)
இன்னும் சொல்ல போனால் அந்த தீவிரவாத தலைவன் தற்போது அமெரிக்காவில் தான் இருப்பதாக காட்டுவார்கள். அதற்காக அமெரிக்க முஸ்லிம்களைஒட்டு மொத்தமாக குறை சொல்கிறார் என்று  எடுத்து கொள்ள முடியாது .


2. இந்த படத்தின் முக்கிய கதை களம் ஆப்கான் நாட்டு மக்களும் தலிபான் தீவிரவாதிகளும் தான். அந்த நாட்டில் மத அடிப்படைவாதம் எவ்வாறு மக்களின் வாழ்வியலோடு கலந்துள்ளது என்றும் , மத அடிப்படைவாதிகளின் கையில் அதிகாரம் இருந்தால் மக்களின்  கதி எப்படி இருக்கும் என்பது முக்கியமாக காட்டபட்டிருக்கிறது.இந்த படத்தில் காட்டபடும் தகவல் எல்லாம் நாளேடுகளில் படித்ததும்,  தீவிரவாதிகள் வெளியிடும் வீடியோவில் வந்ததும்  தான்.இதில் ஓரிரு காட்சிகளை விட மற்றவை எல்லாம் வரலாறு ரீதியாக  மிகை படுத்தி எடுக்கபட்டது இல்லை என்பதே என் கருத்து.(கடத்தபட்ட வீரர்களை காப்பாற்ற ஆப்கானிய மக்கள் மேல் நாட்டு தாக்குதலால் செத்து கிடக்கும் போது, பெரிதாக வருத்தம் படாமல் இந்த பாவம் மேல் நாட்டு அரசை தான் போய் சேரும் என்று சொல்வது போன்ற சீன்கள் விதி விலக்கு.)

மத அடிபடைவாத தீவிரவாதிகளின் மதத்துடன் உள்ள தொடர்பின்  நெருக்கம் மறுக்கமுடியாது. படத்தில் நிறைய இடங்களில் தீவிரவாதிகளின் இஸ்லாமிய தொழுகைகள் மற்றும் குரான் உபயோகம், கொலை செய்யும் போதும், தீவிரவாத தாக்குதல் போதும்  செய்வதாக காட்ட படுகிறது.இதை ஆதார பூர்வமாக நிருபிக்க இயலும் என்றாலும், சமூகபொறுப்புணர்வோடு கமல் இது போன்ற காட்சிகளை ஒரு சில இடத்தில் மட்டும் வைத்திருக்க வேண்டும். அப்படி செய்யாததால் அவரது நோக்கத்தில் பலர் நியாயமான  சந்தேகம் எழுப்ப வாய்ப்பு உள்ளது.

3.மேலை நாடுகளின் விமான தாக்குதலின் கொடூரம் காட்டபட்டாலும், அதற்கான நியாயம் காட்ட படுகிறது. தீவிரவாதிகளின் பக்கம் உள்ள ஒரு சில நியாயங்களை அவர்கள் கூறுவது போல் காட்டபடவில்லை.ஆனால் நிச்சயம் தீவிரவாதிகளின் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்து கூறாததை தமிழகத்தில் யாரும் எதிர்ப்பிற்கான காரணமாக கூற முடியாது. (குருதிபுனல் படத்தில் நக்சல்கள் பக்கம் உள்ள நியாயம் கூறாதது போல்)

4.கமலை பொருத்தவரை மத அடிப்படைவாத தீவிரவாத இஸ்லாமியர்கள் தீவிர மதவாதிகள்.

இந்த படத்தை பார்க்கும் சாதரண் முஸ்லீம்களை பொருத்தவரை, இனி இஸ்லாமிய அடையாளங்களுடன் தொழுவதற்கு சென்றால் கூட பிற மதத்தவர் சந்தேக கண்களுடன் பார்க்க தோன்றும் என்ற பயம்.

தற்போது தமிழகத்தில் வளர்ந்து வரும் இஸ்லாமிய மத அடிப்படைவாத இயக்கங்களை  (ஒரு உதாரணம் - பாக்கிஸ்தானில் தற்போது தீவிர இஸ்லாத்தை கடைபிடிக்காத பிற உட்பிரிவினர்களில் பல்லாயிரம் பேரை ஒவ்வொரு வருடமும் தீவிர மத அடிப்படைவாதிகள் கொன்று குவித்து வருகிறார்கள். தற்போது அதே போன்று தமிழகத்திலும் அதன் ஆரம்பமாக  பல இடங்களில் ஒரு சில இஸ்லாம் மத உட்பிரிவினரை எதிர்த்தும் அவர்களது வழிபாட்டு முறைகளை எதிர்த்தும் போஸ்டர்கள் ஒட்ட பட்டு வருகின்றன in organized way)பொருத்தவரை, அவர்களது சிந்தாந்தங்கள் கடுமையாக கடை பிடிக்க பட்டால் மக்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தமிழக முஸ்லீம்கள் இது போல் திரையில் பார்த்தால் நாளை அவர்களின் வளர்ச்சி பாதிக்கபடும் என்ற பயம் இருக்களாம் .

நிச்சயம் தமிழக இஸ்லாமிய மத அடிப்படைவாத இயக்கங்கள் இது போன்ற படங்களை மிகை படுத்தி  உணர்வு ரீதியாக இஸ்லாமியர்களிடம் வெறியை ஊட்டி தங்களது வளர்ச்சிக்கு உபயோகபடுத்த வாய்ப்புள்ளது. மிதவாத இஸ்லாமிய தலைவர்களின் செல்வாக்கு குறைய கூடும். இது இஸ்லாமிய சமூகத்திற்கும் நாட்டிற்கும் நல்லது அல்ல.

அதே நேரத்தில் இந்து மதவாத அமைப்புகள் தலிபான் தீவிரவாதியை குறை கூறினால் தமிழக முஸ்லீம்களுக்கு ஏன்  கோபம் வருகிறது? அவர்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பா என்று  விஷ பிரச்சாரத்தை ஏற்படுத்துவர்.

 மத அடிப்படைவாதிகளால் ஆப்கான்  மக்கள் பாடும் பாடை காட்டியது பாராட்டுக்குறியது. இந்த அடிப்படைவாதிகளின் செல்வாக்கு பாக்கிஸ்தான்,ஆப்ரிக்க நாடுகள் என்று எங்கும் விரிந்து வருகையில் அந்த ஆபத்தை எதிர்கொள்ள தமிழக இஸ்லாமிய மற்றும் அனைத்து சமூக மக்களும் விழிப்புணர்வோடு இருப்பது அவசியம்.

                                      இஸ்லாமியர்களுக்கு கமலின் விளக்கம்
 
 

கமல் இந்த படத்தில் தீவிரவாதிகள் குரானை உபயோகிக்கும் காட்சிகளையும் , அவர்களின் தொழுகை காட்சிகளையும் நிச்சயம் குறைத்திருக்க வேண்டும்.அவ்வாறு குறைத்திருந்தால் அவர் சொல்லும் "அன்பே அல்லாவின்" எதிரி இஸ்லாம் அல்ல. மத அடிப்படைவாத தீவிரவாதம் தான் என்ற செய்தி தெளிவாக அனைவருக்கும் சென்றிருக்கும்.ஆக பிரியாணிக்கு ஆப்பு வைத்ததில் கமலின் பங்கும் பெரிதாக உள்ளது என்பது மறுப்பதற்கில்லை.

4 comments:

Seeni said...

sako...!

irupakkamum yosiththu solli irukkeenga.....

kadaisi variye enakkum ulla udanpaadu....

Anonymous said...

எது சரியான வழி. சிறப்பான வழி. வெற்றிகரமான வழி..?
தமிழகத்தில் விஸ்வரூபம் படம் ஓடாது என்று பி.ஜெய்னுலாப்தீன் தொலைக்காட்சி செய்தி ஒன்றில் சொல்லிக் கொண்டிருந்தார். ஜெய்னுலாப்தீன் வடிவில் பால்தாக்கரேயைப் பார்த்தேன். இந்த அறிவிப்பும் மிரட்டலும் முட்டாள்தனமானது. கண்டிக்கத்தக்கது. வேடிக்கையானது.

அமைதியை விரும்புகின்ற, கடினமாக உழைக்கின்ற, அப்பாவியான தமிழக முஸ்லிம்கள் மீது சேறும் கல்லும் வாரி இறைத்திருக்கின்றார் கமல் ஹாஸன். கமல் கண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் ஒட்ட நறுக்கப்பட வேண்டும் என்பதிலும் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடம் இல்லை. அவருடைய விஸ்வரூபம் திரைப்படம் தடை செய்யப்பட வேண்டும் என்பதிலும் குப்பைத் தொட்டியில் வீசப்பட வேண்டும் என்பதிலும் இருவேறு கருத்துகளுக்கு இடம் இல்லை. இந்திய வரலாற்றிலேயே விஸ்வரூபம் போன்று மோசமான படம் எடுக்கப்பட்டதில்லை. ஒப்புக்கொள்கின்றேன்.

ஆனால் சட்டத்தை கைகளில் எடுத்துக்கொள்வதாக அறிவிப்பதும் அரசாங்கத்தையும் மக்களையும் மிரட்டுவதும் எந்தவகையிலும் சரியானதல்ல. இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு இயைந்ததும் அல்ல. பால் தாக்கரே போன்ற பாசிஸ்டுகள் வேண்டுமானால் அவ்வாறு மிரட்டல் இட்டு காரியத்தைச் சாதித்துக் கொண்டிருக்கலாம். சட்டத்திலிருந்துத் தப்பித்துவிட்டிருக்கலாம். ஆனால் முஸ்லிம்கள் இவ்வாறு நடந்துகொள்வது எந்த வகையிலும் அழகு அல்ல.

வெளிப்படையாக மிரட்டல் விடுத்ததன் மூலமாக பி.ஜே கமல் ஹாஸனைப் போன்றுதான் நடந்துகொண்டிருக்கின்றார். இஸ்லாத்தைக் குறித்தும் தமிழக முஸ்லிம்களைக் குறித்தும் கமலுக்கு இழிவான, கேவலமான கருத்து இருந்தது. தன்னுடைய அந்த இழிவான கருத்தை ஒட்டுமொத்த தமிழக மக்கள் மீது சினிமா பைத்தியங்கொண்ட, அப்பாவியான, அன்பான மக்கள் மீது திணிக்க முற்பட்டார் கமல். பி.ஜேயும் அதே தொனியில்தான் குரல் கொடுத்துள்ளார். இது நல்லதல்ல.

இது நம்முடைய நோக்கத்திற்கே கேடு விளைவிப்பதாகத்தான் முடியும். இப்போது காலம் மாறிவிட்டது. ஆட்டத்திற்கான விதிகளும் நெறிகளும் மாறிவிட்டன என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். பால்தாக்கரேயாலேயே ஷாரூக்கானின் ‘மை நேம் இஸ் கான்: ஐயம் நாட் எ டெரரிஸ்ட்‘ படத்தைத் தடை செய்ய முடியவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். இது போன்ற தாக்கரே தனமான மிரட்டல்கள் இந்தக் காலத்தில் உதவாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Anonymous said...

இது போன்ற மிரட்டல்கள் முஸ்லிம்களுக்கு எதிரான அவதூறு பிரச்சாரத்திற்குத்தான் உதவும். கமல்ஹாஸனுக்குத்தான் உதவும். பி.ஜே.யின் இந்த மிரட்டலிலிருந்து தங்களை விலக்கிக் கொள்ளுமாறு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பைக் கேட்டுக்கொள்கின்றேன்.

கமலுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து நீண்ட, நீண்ட, நீண்ட சட்டப் போரில் அவரை இழுத்து அடிப்பதுதான் சரியான வழிமுறையாக இருக்கும். நீதிமன்றமாக அலைய விடுங்கள். ஆற்றல் அனைத்தையும் உறிஞ்சி விடுங்கள். நிச்சயமாக அவர் மண்டியிடுவார். தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எதனையும் செய்வார். இன்றைய நீதிமன்ற அமைப்பு இருக்கின்ற நிலையில் இதெல்லாம் சாத்தியமா என நீங்கள் கேட்கலாம். அந்த வெறிபிடித்தவன் சட்டச் சிக்கல்களிலிருந்து மிக இலாகவமாக தப்பித்து வந்துவிட மாட்டானா, என்றும் நீங்கள் கேட்கலாம். சரிதான். அந்த வாய்ப்பும் இருக்கின்றதுதான். என்றாலும் சட்டரீதியாகத் தீர்வும் நீதியும் கிடைப்பதற்கும் வாய்ப்பு இருக்கத்தான் செய்கின்றது. சட்டரீதியாக இதனை அணுகுவதுதான் சரியான வழிமுறை ஆகும்.

அடுத்ததாக, இஸ்லாத்தின் அமைதித் தூதை எடுத்துரைப்பதற்காக கருத்தரங்குகள், ஆய்வரங்குகள், அரங்கக் கூட்டங்கள்,பொதுக்கூட்டங்கள், தேநீர் விருந்து நிகழ்ச்சிகள் போன்றவற்றை அதிக அளவில் நடத்த வேண்டும். கருத்து சுதந்திரத்தின் எல்லைகள் என்ன என்பதைக் குறித்தும் இஸ்லாம் சொல்வதென்னவென்பதைக் குறித்தும் பேச வேண்டும். விஸ்வரூபம் போன்ற கேடுகெட்ட,இழிவான, அருவருப்பான படங்கள் ஏன் தடை செய்யப்பட வேண்டும் என்பதையும் ஆணித்தரமாக, அழுத்தம்திருத்தமாக எடுத்துரைக்கலாம். திரைப்படங்களில் முஸ்லிம்கள் தொடர்ந்து தவறாகச் சித்திரிக்கப்படுவது தொடர்பான நம்முடைய கவலையை,குமுறலை, வேதனையை, கோபத்தை வெளிப்படுத்துவதற்காக அனைத்துவிதமான அமைதியான, ஆக்கப்பூர்வமான,சட்டத்திற்குட்பட்ட வழிமுறைகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக நம்முடைய மார்க்கம் நம்முடைய செயல்களிலும் அன்றாட வாழ்விலும், நடப்புகளிலும் வெளிப்பட வேண்டும். இனிய மார்க்கத்தின் அன்பான அறவுரைகள் நம்முடைய செயல்பாடுகளில் புலப்பட வேண்டும். இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான அவதூறு பிரச்சாரத்தை முறியடிப்பதற்கு இது ஒன்றே வழி. ஒன்றைக் கவனித்தீர்களா?முஸ்லிம்களை வில்லன்களாய், தேசத் துரோகிகளாய்,பயங்கரவாதிகளாய்ச் சித்திரித்து எண்ணற்ற படங்கள் வெளியாகியிருக்கின்றன. அந்த கேப்டனும் அர்ஜுனும் போட்டி போட்டுக்கொண்டு கமலை விட அதிகமான எண்ணிக்கையில் இத்தகைய படங்களை எடுத்திருக்கின்றார்கள். ஆனால் அவற்றால் உங்களைப் பற்றியும் என்னைப் பற்றியும் நம்முடைய நண்பர்களின் கருத்து மாறிவிட்டதா, என்ன? மக்கள் திரைப்படப் பிம்பங்களைவிட இரத்தமும் சதையுமாய் உயிர்த்துடிப்புள்ள மனிதர்களைப் பார்த்துதான் உங்களையும் என்னையும் பார்த்துத்தான் தாக்கம் பெறுகின்றார்கள்.

சகோதர சமுதாயங்களைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளுடனான நம்முடைய நட்பும் உறவும் நம்முடைய செயல்பாடுகள், நடத்தை,அணுகுமுறை, பழகும்விதம் ஆகியவற்றைப் பொருத்தே அமையுமே தவிர திரைப்படங்களில் தவறாகச் சித்திரிக்கப்படுகின்ற மாயைகளின் அடிப்படையில் அல்ல என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

நம்முடைய செயல்பாடுகளும் நடத்தையும் அன்பும் பண்பும் நிறைந்ததாய், நேசமும் பாசமும் மிகுந்ததாய், சத்தியமும் வாய்மையும் ததும்பியதாய் இருக்குமேயானால் எத்தனை கமல்கள் வந்தாலும் எத்தனை கேப்டன்களும் அர்ஜுன்களும் எத்தனை படம் எடுத்தாடினாலும் எத்தனை விஸ்வரூபங்கள் வந்தாலும் உறவையோ நட்பையோ பாதிக்க முடியாது என்பதுதான் உண்மை.இந்த நாள் வரை இஸ்லாத்தை ஏற்றவர்களில் 99 சதவீதத்தினர் நம்முடைய நடத்தையையும் கனிவையும் பார்த்துதான் வந்திருக்கின்றார்கள் என்பதும் உண்மை.
விஸ்வரூபத்தை எதிர்கொள்வதற்கு இதுதான் சரியான வழி. சிறப்பான வழி. வெற்றிகரமான வழி.

-T.அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்

சதுக்க பூதம் said...

வாங்க சீனி. இந்த பிரச்சனை பற்றிய பதிவுகளை பார்த்தால் பதிவர்கள் தெளிவாக இரு குருப்பாக பிரிந்திருப்பது தெரிகிரது. இரண்டு பக்கமும் யாரும் யோசித்து பார்ப்பது இல்லை என்று தெரிகிறது. இது நல்லதுக்கில்லை