Monday, November 26, 2012

எழில் மிகு ஹவாய் - 4 Snorkeling & Parasailing

ஹவாய் தீவுகளுக்கு மக்களை ஈர்ப்பதில் முக்கிய பங்கை வகிப்பது அங்கு Snorkeling செய்ய கிடைக்கும் வாய்ப்பு. ஸ்னார்கெலிங் என்பது முகத்தில் ஒரு நீச்சல்  முகமூடி அணிந்து சுமார் 30 சென்டிமீட்டர் நீளமுள்ள டியூபை வாயில் மாட்டி கொண்டு தண்ணீரில் நீந்தியவாறே கடலுக்கடியில் இருக்கும் பவழபாறைகளையும், வண்ண மய மீன்களையும் இதர கடல் வாழ் உயிரிணங்களையும் கண்டு களித்தபடியே கடலில் நீந்தி செல்வது தான்.வாயில் வைத்துள்ள டியூப் மூலம் சில நிமிடங்கள்  கடலின் நீருக்கடியில் இருந்து மூச்சு விட முடியும்.

ஸ்னார்கெலிங்ல் இரு வகை உள்ளது. ஒன்று கடற்கரை ஓரத்தில் ஆழம் குறைந்த பகுதியில் ஸ்னார்க்கலிங்(Shallow water Snorkel) செய்து கடல் வாழ் உயிரிணங்களை பார்ப்பது ,மற்றொன்று  ஓரளவு கடலின் உள்ளே மிதமான ஆழம் உள்ள பகுதியில்(deep water snorkel) ஸ்னார்க்கலிங் செய்து கடல்  வாழ் உயிரிணங்களை பார்ப்பது.

ஹவாய் பெருந்தீவின் பெரும்பான்மையான கடற்கரைகள் Shallow Water Snorkeling செய்ய ஏற்றவை. அதற்கு தேவையான உபகரணங்கள் கடற்கரை ஓரங்களிலேயே வாடகைக்கு கிடைக்கும்.

பல தனியார் நிறுவனங்கள் deep water snorkeling tourஅழைத்து செல்கின்றனர்.ஹவாய் பெருந்தீவில் பெரிய  நீராவி படகுகள் மூலம் கடலில் சிறிது தூரம் பயணம் செய்து ஸ்னார்க்கலிங் செய்ய ஏற்ற பகுதிக்கு கூட்டி செல்வார்கள். அந்த படகிலேயே ஸ்னார்க்கலிங் செய்ய தேவையான உபகரணங்களும், உயிர் காப்பு உடைகளும் கொடுப்பார்கள். பிறகு ஸ்ணார்க்கலிங் செய்ய தேவையான அறிவுரைகளை கூறுவார்கள். அதன் பிறகு ஒன்னரை மணி நேரம் கடலில் ஸ்னார்க்கலிங்  செய்து மகிழலாம். நன்கு நீச்சல் பயிற்சி பெற்றவர்கள் படகின் மேற்பகுதியிலிருந்து கடலில் குதிக்கலாம். நீச்சல் சிறிதும் தெரியாதவர்கள்( என்னை போன்றவர்கள்!) கூட உயிர்காப்பு உடை அணிந்து கடலில் சிறிது நேரம் மிதந்து பார்க்கலாம்.அது மட்டுமன்றி கண்ணாடி பதிக்கபட்ட மிதக்கும் பலகையும் உள்ளது. அந்த பலகையில் மிதத்தவாறே கண்ணாடி வழியே கடல் வாழ் உயிரிணத்தை காணலாம்.

பசுபிக் பெருங்கடலில் நீந்திய படியே கடல் வாழ் உயிரிணங்களை கண்டு களிப்பது உண்மையிலேயே மறக்க முடியாத அனுபவமாகும்.இந்த ஆழ்கடல் ஸ்ணார்க்கலிங் செல்வதில் மற்றொரு லாபம் பசுபிக் பெருங்கடலுக்குள் சுமார் 1 மணி நேரம் கடற்பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கிறது. இந்த பயணத்தின் போது கூட்டம் கூட்டமாக  டால்பின்களையும் அதிர்ஷ்டம் இருந்தால் திமிங்களத்தையும் காணக்கூடிய வாய்ப்பு உள்ளது.நாங்கள் செல்லும் போது டால்பின் கூட்டத்தை காணும் வாய்ப்பு கிடைத்தது.


Parasailing



படகில் கட்டபட்ட பாராசூட்டில் இருந்து பறப்பது பாராசைலிங் எனபடுவது ஆகும்.கோனா கடற்கரை பகுதியில் இருந்து கடலுக்குள் படகு மூலம் அழைத்து செல்வார்கள். பிறகு படகில் கட்ட பட்ட பாராசூட்டில்  நம்மை கட்டி கொள்ள வேண்டும்.பிறகு சிறிது சிறிதாக பாராசூட்டின் கயிறை பட்டம் போல் மேலே விடுவர். அதிக பட்சமாக 1200 அடிவரை வானத்தின் உயரத்தில் பறக்க விடுவர். வானத்திலிருந்து பறவை போல் பறந்து பெருந்தீவின் கடற்கரையையும் மலைகளையும் கண்டுகளிக்கும் சுகமே தனிதான்.

முந்தய பகுதி
எழில் மிகு ஹவாய் 3 - ஆழ் கடலில் பவழபாறைகளும் வண்ண மீன்களும்

அடுத்த பதிவு
எழில் மிகு ஹவாய் - 5 எரிமலை எப்படி வெடிக்கும்?
--

1 comment:

Local outrigger canoe said...

Beautiful article in Tamil and I got some valuable information from this post