Wednesday, September 19, 2012

எழில் மிகு ஹவாய் 3 - ஆழ் கடலில் பவழபாறைகளும் வண்ண மீன்களும்

           கடற்கறையின் அழகை ரசித்த பின் மனதிற்குள் தோன்றும் கேள்வி  ஆழ் கடலின் அடியில் என்னதான் இருக்கும் என்பது? நீச்சலின் மூலம் ஆழ் கடலுக்குள் சென்று பார்ப்பது கடினம். நன்கு பயிற்சியுடைய ஸ்கூபா டைவராக இருந்தால் சிறிது முயற்சி செய்து பார்க்களாம். சாதாரண மனிதர்கள்  ஆழ்கடலை டிஸ்கவரி சேனல் போன்ற தொலைகாட்சி மூலம் தான் பார்க்க முடியும். ஆனால் நேரில் பார்க்க ஒரே வழி அதி நவீன நீர்மூழ்கி கப்பல் தான்.

          நூறு அடிக்கும் மேல் கடலுக்கு அடியில் நீர் மூழ்கி கப்பல் மூலம் பயணம் செய்து ஆழ்கடலின் அழகை பார்க்க ஹவாய் பெருந்தீவில் வசதி உள்ளது.இதன் மூலம் நிஜ நீர் மூழ்கி கப்பலில் பயணம் செய்யும் அனுபவத்தையும் , ஆழ் கடலின் அழகை கண்டு களிக்கும் அதிசய அனுபவத்தையும் ஒரு சேர பெறலாம்.
நீர்மூழ்கி வழியே ஓர் பார்வை

      கோனா கடற்கரையிலிருந்து விசை படகு மூலம் கடலின் உட் பகுதிக்கு சிறிது தூரம் கூட்டி செல்கிறார்கள். அங்கு நீர்மூழ்கி கப்பல் தயராக நிற்கிறது. இந்த நீர்மூழ்கி கப்பலுக்கு அட்லான்டிஸ் என்று பெயர். அது 64 பேரை ஏற்றி செல்லும் உலகிலேயே பெரிய பயணிகள் நீர்மூழ்கி கப்பல் வகையை சேர்ந்தது.விசை படகுகிலிருந்து நீர்மூழ்கிக்கு மாறி ஏணி படி மூலம் நீர்மூழ்கிக்குள் அழைத்து செல்கிறார்கள். நீர்மூழ்கியில் அனைவரும் கடலை பார்க்க கண்ணாடி ஜன்னல் உள்ளது. நீர்மூழ்கி நகர தொடங்கியதும் சிறிது சிறிதாக கடலின் கீழ்மட்டத்தை நோக்கி செல்கிறது.
நீர்மூழ்கி உள்ளே! வெளியே!

      ஹவாய் பகுதி கடற்கரை பவழ பாறைகளுக்கு பெயற்பெற்றது. பவழ பாறை என்றவுடன் ஏதோ உயிறற்ற பாறை என்று நினைத்துவிடாதிர்கள்.பவழம் என்பது ஒரு வகை கடற்வாழ் உயிரினங்கள். அவை வெளியிடும் கால்சியம் கார்பனேட் பாறைகளாக வளர்ந்து நிற்கிறது.இந்த பவழ பாறைகள் மீன்கள். புழுக்கள், மொளாஸ்காக்கள்( 12ம் வகுப்பு விலங்கியல் பாடத்தில் படித்தது) மற்றும் பல்வேறு கடல்வாழ் உயிரினங்களுக்கு இருப்பிடமாக உள்ளது.  இந்த பவழ பாறைகள் வண்ண மயாமாக இருந்தாலும் புகை படங்களில் பார்ப்பதை போல் பளீர் வண்ணத்துடன் இல்லை.
பவழ பாறைகளும் மீன்களும்

பவழ பாறைகள்

   கடல் அடியில் கூட்டம் கூட்டமாக வண்ண மயமாக செல்லும் மீன்களை பார்ப்பது கண்கொள்ளா காட்சியாக உள்ளது.கோனா கடற்கரை பகுதியில் உள்ள பல வகை மீன்களை கொண்ட புகைபட அட்டையை கையில் கொடுத்து விடுகிறார்கள். அது மற்றுமின்றி அந்த நீர்மூழ்கியில் வரும் விவரிப்பாளர் கண்ணில் தென்படும் மீன் வகைகள் பற்றி விவரிக்கிறார்.மீன்கள் மற்றும் பவழ பாறைகளை தவிர கடலில் மூழ்கிய இரு கப்பலையும் கடலின் அடியே காண முடிகிறது.அனைத்து வண்ண மீன்களும் கூட்ட்ம் கூட்டமாக செல்லும் இது போன்ற காட்சிகளை டிஸ்கவரி சேனலில் மட்டுமே காண முடியும்.அதை நேராக பார்க்கும் அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்கமுடியாது..

  நீர்மூழ்கி கப்பல் கடலின் அடியே 100 அடிகளுக்கு மேல் கீழ் நோக்கி செல்கிறது.இது போன்ற நீர்மூழ்கி பயண அனுபவமும் ஆழ்கடலை பார்த்து ரசிக்கும் வாய்ப்பும் நிச்சயம் ஒரு அறிய வாய்ப்பாகும்.

ஆழ்கடலின் அழகை கண்டு ரசித்தாகி விட்டது. நடுகடலில் நீந்திய படி கடல்வாழ் உயிரினங்களை கண்டு களித்தால் எப்படி இருக்கும். அடுத்த பதிவில் பார்ப்போம்.

முந்தய பகுதி
எழில் மிகு ஹவாய் 2 - அழகிய கடற்கரைகள்

அடுத்த பகுதி
எழில் மிகு ஹவாய் - 4 Snorkeling & Parasailing

--

Monday, September 10, 2012

எழில் மிகு ஹவாய் 2 - அழகிய கடற்கரைகள்

                ஹவாய்  என்றவுடன் அனைவரின் மனதுக்கும் முதலில் வரும் நினைவு அழகிய கடற்கரைகள். நீல நிற கடல், கண்ணாடி போல் தெளிந்த நீர், இதமான தட்பவெட்ப நிலையில் நீச்சலுக்கேற்ற மிதமான நீர், தூய்மையான கடற்கரை,தெளிவான வெண்ணிற மணல் என அனைத்து வித மனிதர்களும் விரும்பும் அனைத்து குணாதிசியங்களும் கொண்டது ஹவாய் கடற்கரைகள். இயற்கை அழகு மட்டுமன்றி மனிதன் அறிமுகபடுத்திய பல்வேறு வகை தீர தண்ணீர் விளையாட்டுகளை அனுபவிக்கவும் இங்கு வசதி உண்டு.





ஹவாய் பெருந்தீவின் மற்றொரு சிறப்பம்சம் அங்கு பல்வேறு வண்ணங்களை கொண்ட மணலை கொண்ட  கடற்கரைகள். இங்கு வெண்ணிற மணலை கொண்ட கடற்கறை மட்டுமில்லாமல் கருப்பு மற்றும் பச்சை நிற மணலை கொண்ட கடற்கரைகளும் உள்ளன.

கடற்கரை என்று பார்த்தோமானால் பெருந்தீவின் மேற்கு பகுதியில் உள்ள கோனா கடற்கரை பகுதியும் கேலகெக்குவா குடா பகுதி கடற்கரைகளும் உலக பிரசித்தம்.இங்கு இருக்கும் கடற்கரைகள் மெரினா கடற்கரை போன்று மிக பெரியதாக இருக்காது. ஆனால் மிக சிறிய கடற்கரைகள் மேற்கு பெருந்தீவு முழுதும் நிறைய உள்ளது. இந்த கடற்கரைகள் வெண்மையான மணலையும்,தெளிந்த கண்ணாடி போன்ற நீரையும் கொண்டு மிகவும் தூய்மையாக காணபடுகிறது. கடல் நீரின் தட்ப வெட்பம் ஆண்டு முழுதும் மிதமாக இருக்கும். கடற்கரை ஓர பகுதிகளிலேயே பல அழகிய வண்ண மய மீன்களையும், பவள பாறைகளையும் நீந்திய படியே கண்டு களிக்களாம்.கடலின் அடியில் நீச்சலின்  போது குனிந்து பார்க்க(ஸ்னார்களிங்) தேவையான உபகரணங்கள் அனைத்தையும் இங்கு வாடகைக்கு எடுத்து உபயோக படுத்தலாம். அதே போல் கடல் ஓரத்தில் சிறிய அளவு படகோட்ட கூட பயிற்சியுடன் கூடிய உபகரணங்களை வாடகைக்கும் தருகிறார்கள்.




பாறைகள் அறிக்க பட்டு தான் மணல் தோன்றும் என்று நாம் கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் ஹவாய் கடற்கரையில் மணல் தோன்றிய வரலாறு வேறு விதமானது. ஹவாய் தீவின் கடற்கரைகளில் பவள பாறைகள் அதிக அளவு உள்ளது.  இந்த பவள பாறையை உண்ணும் மீன்கள் வெளியேற்றும் கழிவுதான் வெண்ணிற சிறு மணற் துகள்கள். மீன்கள் எவ்வளவு மணலை உற்பத்தி செய்து விட போகிறது என்று நினைக்கிறீர்களா? சராசரியாக ஒரு டன்(1000கிலோகிராம்) மணலை ஒரு மீன் ஒரு வருடத்தில் உற்பத்தி செய்யும்.

மிதமான தட்ப வெட்ப நிலையில், ரம்மியமான சூழ்நிலையில் ஹவாய் கடற்கரைகளில் பல மணி நேரம் இனிமையாக பொழுதை கழிக்கலாம்.

ஹவாய் பெருந்தீவின் மற்றொரு சிறப்பம்சம் அங்கு உள்ள கருங்கடற்கரைகள். புனலூலு பகுதியில் உள்ள கடற்கரையின் மணல் கருமை நிறத்தை கொண்டுள்ளது. ஹாவாய் எரிமலையிலிருந்து வெளியேறிய எரிமலைகுழம்பு கடலின் மோது மோதி குளிர்வதால் உண்டானது தான் இந்த கருங்கடற்கரைகள்.பசால்ட் வகை பாறைகளின் துகள்களை இந்த கடற்கரைகள் கொண்டிருக்கும்.இங்கு கருப்பு நிற மணல் படிகங்கள் வடிவில் பளபளவென பார்வைக்கு குளிர்ச்சியாக இருக்கும்.



இந்த கடற்கரையின் மற்றொரு சிறப்பம்சம் இங்கு அழிவு நிலையில் உள்ள(Endangered Species) பச்சை கடல் ஆமையை  பெரும்பான்மையான நேரங்களில் காணலாம்.நாங்கள் சென்ற போது கூட ஏழெட்டு பசுமை கடலாமைகளை காணும் வாய்ப்பு கிடைத்தது.இந்த கடலாமைகளை தொடுவதோ, கருப்பு நிற மணலை எடுத்து வருவதோ சட்டபடி குற்றமாகும்(அருகில் உள்ள கடையில் கருப்பு மணலை காசு கொடுத்து வாங்கி வருவது மட்டும் சட்டபடி குற்றமாகாது!).




ஹவாய் பெருந்தீவின் தனி சிறப்பு அங்குள்ள பச்சை வண்ண மணல்  கடற்கரை என்றால் மிகையாகாது.என்னது பச்சை வண்ண மணல் கடற்கரையா? கேட்கவே ஆச்சரியமாக உள்ளதா? ஆம் உலகிலேயே இரு இடங்கிளில் பச்சை வண்ண மணல்களை கொண்ட கடற்கரை உள்ளது.அவற்றில் ஒன்று மடகாஸ்கர் தீவிலும் மற்றொன்று ஹவாய் பெருந்தீவிலும் உள்ளது.

அமெரிக்காவின் தெற்கு எல்லை முனை ஹாவாய் பெருந்தீவில் தான் உள்ளது. இதை South point என்று அழைப்பார்கள்.பச்சை மணல் கடற்கரை இந்த சவுத் பாயிண்ட் அருகில் உள்ளது என்ற செய்தியும் பெப்பகோலியா என்ற பகுதியில் உள்ளது என்ற செய்தி மட்டும் தெரியும்.இந்த கடற்கரையை எவ்வாறு சென்றடைய வேண்டும் என்று படிக்காமல் GPSல் சவுத் பாயிண்ட்  விலாசத்தை போட்டு மாலை 3 மணி போல் கிளம்பி விட்டோம்.ஆனால் அருகில் செல்ல செல்ல பச்சை மணல் கடற்கரை செல்ல எந்த குறியும் இல்லை. சரியான பாதையில் தான் செல்கிறோமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.  அந்த கடற்கரையை அடைய "சிறிது தூரம்" நடக்க வேண்டும் என்று கேள்வி பட்டிருந்தோம். அதற்கு நேரம் கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. சவுத் பாயிண்ட் நோக்கி செல்லும் ஒரு குறுகிய சாலையில் கடைசியாக பச்சை மணல் கடற்கரைக்கு செல்லும் ஒரு குறியீட்டை பார்த்தோம்.கார் போகும் பாதை முடிந்தவுடன் தான் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த இடத்திலிருந்து கடற்கரை சென்றடைய சுமார் 5 கிலோமீட்டர்கள் ஏற்ற இறக்கத்துடன் கூடிய பாதையில் நடக்க  வேண்டும் என்பது. நாங்கள் சென்றது மாலை நேரம். எனவே அங்கு கால் நடையாக சென்று வர சுமார் 4 மணி நேரம் ஆகும். அதுவும் குழந்தையை வைத்து கொண்டு நடந்து செல்வது என்பது முடியாத காரியம். எங்கிருந்தாவது எட்டி பார்த்த பச்சை நிற கடற்கரையை தூரத்திலிருந்து பார்த்து திருப்தி அடையலாம் என்றால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை மணலை பார்க்கவே முடியவே இல்லை.

 சரி கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்று எண்ணி  கொண்டிருந்தோம் கடைசியாக அதிர்ஷ்டம் அங்கு உள்ள அந்த பகுதியில் குடியிருப்போர் வழியில் அடித்தது. அங்கு குடியிருக்கும் ஒரு சிலர் மக்களை தங்களது கனரக வாகனங்கள் மூலம் டிரிப் அடித்து சம்பாதித்து கொண்டுள்ளார்கள்.(அட நம்மூர் போல தான்!) நாங்கள் சென்ற நேரத்தில் அவரகள் மூட்டையை கட்டி விட்டாலும் ஒரே ஒரு நபர் மட்டும் எங்களை பச்சை மணல் கடற்கரைக்கு அழைத்து செல்ல சம்மதித்தார். ஒரு நபருக்கு 15$ என பெற்று கொண்டு தனது வண்டியில் ஏற்றி கொண்டு எங்களை அந்த கடற்கரைக்கு அழைத்து சென்றார். மிக கடுமையான மோசமான பாதை. நடந்து செல்ல மட்டுமே ஏற்ற பாதையில் ஒருவாராக எங்களை அவரது வண்டியில் அழைத்து சென்றார்.அவர் கூறிய தகவலின் படி அங்கு உள்ள உள்ளூர்காரர்கள் தான் இந்த கடற்கரைக்கு வழி காட்டும் போர்டுகளை உடைத்து எடுத்து சென்றுவிட்டாரகள்.குண்டும் குழியுமான ஏற்ற இறக்க பாதையை கடந்து கடைசியாக பச்சை மணல் கடற்கரையை அடைந்தோம். இரவு நேரம் நெருங்கி விட்டதால் அங்கு நாங்கள் மட்டுமே இருந்தோம். மலை,பாறை,மரங்களுக்கு அருகில் பச்சை மணல் கடற்கரை ஜொலித்தது. எதிர்பார்த்தது போல் செடி பச்சையாக இல்லாமல் லேசான ஆலிவ் நிற பச்சை வண்ணத்தில் கடற்கரை இருந்தது.

(புகை படம் எடுக்கும் போது போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் பசுமை நிறம் புகை படத்தில் சரியாக தெரியவில்லை.)

பல்லயிரம் ஆண்டு முன்பு ஏற்பட்ட எரிமலை குழமிலிருந்து  உண்டான சின்டர் கோன் என்னும் சிறுமலை குன்று ஒலிவின்(Mg,Fe)2SiO4.) என்ற உலோகத்தை அதிகம் கொண்டிருந்தது. இந்த ஒலிவீன் பச்சை நிறத்தை கொண்டது.கடல் அலை இந்த மலையில் மோதி மோதி ஒலிவினை அறித்து பச்சை மணலை ஏற்படுத்தியுள்ளது. இங்கு உள்ள ஒலிவீன் எல்லாம் அறித்து கடலில் அடித்து செல்ல பட்டவுடன் இது மற்ற கடற்கரையை போல் ஆகிவிடும்.

கடற்கரைகளை பற்றி பார்த்து விட்டோம். ஆழ்கடலில் எழில் கொஞ்சும் பவழ பாறைகளையும் வண்ண மய மீன்களையும் எப்படி பார்ப்பது? அதை அடுத்த பதிவில் பார்ப்போம்!

இந்த பதிவின் முதல் பகுதி

எழில் மிகு ஹவாய் 1 - அலோஹா!

இந்த பதிவின் அடுத்த பகுதி

எழில் மிகு ஹவாய் 3 - ஆழ் கடலில் பவழபாறைகளும் வண்ண மீன்களும்

--
--



 

Tuesday, September 04, 2012

எழில் மிகு ஹவாய் 1 - அலோஹா!


ஹவாய் பற்றிய அறிமுகம் எனக்கு சிறுவயதில் காலண்டர்களில் இருக்கும் படங்களின் மூலம் கிடைத்தது. உள்ளத்தை கொள்ளை கொள்ளும் இயற்கை அழகு மிகுந்த புகை படங்களை பார்க்கும் போது அது தான் சொர்க்கமோ என்று சிறு வயதில் எண்ண தோன்றியது. அதன் பிறகு National Geographic,Discovery போன்ற தொலைகாட்சிகளிலும், ஜுராசிக் பார்க் போன்ற திரை படங்களிளும் ஹவாய் பற்றி பார்த்த போது மலைப்பாக இருந்தது.இன்றைய இணைய உலகத்தில் ஹவாய் பற்றிய காணொளிக்கு பஞ்சமில்லை.பலமுறை யோசித்து விட்டு கடைசியாக ஹவாய் செல்ல முடிவெடுத்தோம்.

ஹவாய் என்றால் எந்த தீவிற்கு செல்வது என்பது முதல் கேள்வி.ஹவாய் என்பது வட அமெரிக்கா மற்றும் ஆசியாவிற்கு நடுவே பசுபிக் கடலில் உள்ள தீவுகளின் கூட்டம்.ஹவாய் அமெரிக்காவின் 50வது மாநிலமாக 1959ம் ஆண்டு இணைக்கபட்டது. ஹவாயின் வரலாற்றை பிறிதொரு பதிவில் காண்போம்.ஹவாய் என்பது 7 பெரிய தீவுகளையும் நூற்றுக்கும் அதிகமான குறுந்தீவுகளையும் கொண்டுள்ளது. அதில் முக்கியமான தீவுகள் பெருந்தீவு (Big Island/Island of hawaii),மாவி(Maui), ஒஆஹு(O'ahu),கௌவா'யி(kaua'i) முதலியவை.அனைத்து தீவுகளிளும் சுற்றுல்லா பயணிகள் ரசிக்கும் வகையில் அருமையான நீல நிற கடலும், மிதமான வெப்பநிலை கொண்ட தண்ணீரும், கடல் நீரில் பல்வேறு விளையாட்டுகளும் , கன்ணுக்கு குளிர்ச்சியான வெப்ப மண்டல காடுகளும் உள்ளன. எனவே எந்த தீவை தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் குழப்பத்தை ஏற்படுத்தும் கேள்வியே!

சுற்றுல்லா முகவர்கள் மூலம் ரிசர்வ் செய்யும் போது சில நாட்கள் ஒரு தீவிலும் மற்றைய நாட்களை ஒரு தீவிலும் தங்குவது போல் ரிசர்வ் செய்யலாம். ஆனால் அது ஒரு தீவை முழுமையாக பார்த்த திருப்தியை ஏற்படுத்தாது. அதே போல் ஹவாய் தீவிற்கு சென்று அங்கு உல்லாச கப்பலில் ஒரு வாரம் முன் பதிவு செய்யலாம். அதன் மூலம் இரவு கப்பலில் தங்கலாம். அந்த கப்பல் அனைத்து பெரிய தீவுகளுக்கும் கூட்டி செல்லும். ஒவ்வொரு தீவிலும் ஒவ்வொரு activity








என்று முடிவெடுத்து அனைத்தையும் முடிக்கலாம். இந்த முறையில் பணம் அதிகம் செலவாகும். அதே நேரத்தில் நமது இஷ்டம் போல் திட்டமிட்டு செயல்பட முடியாது. எனவே எதாவது ஒரு தீவிற்கு செல்வது என்று முடிவெடுத்தோம்

பெரும்பான்மையான activities அனைத்து தீவுகளிலும் இருந்தாலும் ஒரு சில தீவுகளில் உள்ள தனி சிறப்புகளை பார்த்தோமானால் ஒஆஹுல் தண்ணிருக்கு அடியில் ஓட்டி செல்லும் ஸ்கூட்டரும் (BOB),முத்து துறைமுகம் (Pearl Harbour) போன்றவையும்,மாவியில் மிகபெரிய நீர்வீழ்ச்சியும் இருக்கின்றன.பெருந்தீவு ஹவாயிலேயே பெரிய தீவு. உலகிலேயே மிக பெரிய செயல் திறன் கொண்ட எரிமலை இங்கு தான் உள்ளது.உலகில் உள்ள 13 சீதோஷ்ண நிலைகளில் 11 சீதோஷ்ண நிலைகள் 4000 சதுர மைல் பரப்பளவே உள்ள பெருந்தீவில் உள்ளது. அது மட்டுமில்லாமில் இங்கு பொதுவாக சுற்றுல்லா பயணிகளின் எண்ணிக்கை சிறிதளவு குறைவாக இருக்கும். அது தவிர மற்ற தீவுகளில் இருக்கும் அனைத்து வகை acivitiesகளும் இங்கும் இருக்கும்.ஹவாய் செல்ல விரும்புபவர்கள் தங்களுக்கு எதில் மிகுந்த விருப்பம் உள்ளது(எரிமலை,கடற்கரை,அடர்ந்த காடு, பெரிய நீர்வீழ்ச்சி ) என முடிவெடுத்து, அந்த காரணிகள் எந்த தீவில் மிகமிக பிரமாதமாக உள்ளதோ அதை தேர்வு செய்யலாம். எங்களுடைய தேர்வு பெருந்தீவாக இருந்தது.

பெருந்தீவில் கோனா மற்றும் ஹீலோ என முக்கிய விமான நிலையங்கள் உள்ளது. கோனா பகுதி ஓரளவு காய்ந்த, மழை அளவு குறைந்த, நல்ல கடற்கரைகளை கொண்ட பகுதி. ஹீலோ பகுதி அதிக மழையளவு கொண்ட எரிமலை மற்றும் வெப்ப மண்டல காடுகளை கொண்ட பகுதி. எனவே சுற்றுல்லா பயணிகள் பொதுவாக கோனா கடற்கறையில் உள்ள ரிசார்ட்களில் தங்கி ஹீலோ பகுதிக்கு சென்று எரிமலை மற்றும் நீர் வீழ்ச்சிகளை பார்ப்பர். பெருந்தீவிற்கு வருபவர்கள் கட்டாயம் கார் ஒன்றினை வாடகைக்கு எடுத்து கொள்வது அவசியம். இங்கு பஸ் வசதி குறைவு.

பெருந்தீவில் முக்கியமாக காண வேண்டிய இடங்கள் / செய்ய வேண்டிய activities பற்றி பார்ப்போம்.

1.கடற்கறைகள்
2.எரிமலை
3.நீர் வீழ்ச்சிகள் மற்றும் வெப்ப மண்டல காடுகள்
4.ஹவாய் பழங்குடியினரின் மாதிரி குடியிருப்பு மற்றும் கோவில்கள்
5.பவள பாறைகள் மற்றும் கடல் உயிரிகளை காண நீர்மூழ்கி கப்பல் பயணம்
6.எரிமலையையும், வெப்ப மண்டல காடுகளையும் நன்கு காண ஹெலிகாப்டர் பயணம்
7.கடல் வாழ் உயிரிகளை நேரில் கண்டு களிக்க ஸ்னார்க்கலிங்(Shallow water/Deep water Snorkling)
8.Scooba Diving
9.Parasailing
10.கம்பி சருக்களில் பறந்த படியே நீர்வீழ்ச்சி மற்றும் அடர்ந்த காடு/மலைகளின் அழகை கண்டு களிக்கும் Zipline
11.மலையேற்றம்(Trekking)-எளிதில் சென்றடைய முடியாத நீர்வீழ்ச்சி/காடுகளுக்கு கூட்டி செல்லும்.
12.எளிதில் சென்றடைய முடியாத நீர் வீழ்ச்சி,நீரோடை,கடற்கரைக்கு சிறப்பு வாகனத்தில் கூட்டி செல்லும் பயணம்(ATV Tour)
13.கேப்டன் குக் நினைவிடம்
14.மௌன கியா வானியல் நுண்ணோக்கி மையம்(Mauna Kea Observatories)
15.மெக்கடமியா பருப்பு மற்றும் கோனா காபி தொழிற்சாலை
16.ஹவாயி கலாச்சார நடனத்துடன் இரவு உணவு
17.மற்றும் பல

மேற்கூறிய அனைத்தையும் ஒரு சேர பார்க்க வேண்டுமானால் அதிக பொருட்செலவு ஏற்படுவதுடன் நேரமின்மையும் ஒரு காரணியாக அமைய கூடும். எனவே ஹவாயை சுற்றி பார்க்க விரும்புவோர் கிளம்புவதற்கு முன்பே எதை தேர்வு செய்வது என்று முடிவெடுப்பது அவசியம்.

இந்த பதிவின் தலைப்பில் உள்ள அலோஹா என்றால் என்ன என்று கேட்கிறீர்களா? அலோஹா என்பது ஹவாயியன் மொழியில் வணக்கம் என்பது ஆகும். ஹவாயிக்கு சென்றால் அலோஹாவை அனைத்து இடங்களிளும் கேட்களாம்!.

இனி வரும் பதிவுகளில் மேற் கூறிய activities பற்றி விரிவாக பார்ப்போம்

இந்த பதிவின் அடுத்த பகுதி
எழில் மிகு ஹவாய் 2 - அழகிய கடற்கரைகள்

--

--

Monday, September 03, 2012

குஜராத் புரட்சியும் ஹசாரேக்கு மோடி கொடுத்த ஆப்பும்


குஜராத் முதல்வர் மோடி பற்றி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக புதிய புதிய புரட்சி செய்திகள்  ஊடகங்களில் வந்து கொண்டுள்ளன. அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கை தரம் மற்றும் வளர்ச்சியை கணக்கிடும்  மனித வள மேம்பாட்டு குறியிடில் (Human Developmentபெரிய  முன்னேற்றமின்மை  மற்றும் சிறிய மற்றும் குறு தொழில்களின் வளர்ச்சியில் பெரிதாக சாதிக்காதது  போன்ற தேவையற்ற  செய்திகளுக்கு போதிய முக்கியத்துவம் தராமல் மோடியின் பிற புரட்சிகளை பற்றி ஊடகங்கள் "பாராட்டும் " படியே செய்திகளை வெளியிடுகிறது.

தற்போது வளர்ந்த நாடுகளில் கூட நடக்காத மாபெரும் புரட்சி குஜராத் மக்களிடையே நடந்து கொண்டிருக்கிறது. அந்த புரட்சி பற்றிய செய்தியை நம் நாட்டு ஊடகங்களில் மட்டும் செய்தியாகி அழிந்து விடாமல் அமெரிக்காவின் Wall Street Journal பத்திரிக்கைக்கு  கூறி ஒட்டு மொத்த உலக மக்களையே திகைப்பில் ஆழ்த்தி விட்டார் மோடி. அந்த புரட்சியை நடத்துபவர்கள் மூன்று வயதுக்கும் குறைவான குஜராத் மாநில சிறுமிகள் என்றால் ஆச்சரியமாக உள்ளது அள்ளவா?.மோடி பதவி ஏற்றதிலிருந்தே குஜராத்தில்
 பிறக்கும் குழந்தைகள் மிகவும் அறிவு கூர்மையுடன் பிறப்பது "அனைவருக்கும் தெரிந்ததே". ஆனால் அனைவருக்கும் தெரியாத ," மூன்று வயதிற்கும் குறைவான கைகுழந்தைகளுக்கு தங்களுடைய அழகு பற்றி அளவிற்கதிகமான அக்கறை உள்ளது" என்ற பகீர் உண்மையை அமெரிக்கர்களுக்கும் உலகுக்கும் தெரிய படுத்தியுள்ளார் மோடி. எப்படி என்று கேட்கிறீர்களா?குஜராத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டசத்து குறைபாடு அதிகம் இருப்பது பற்றி மோடியிடம் கேட்ட கேள்விக்கு அவர் கூறிய பதில்: குஜராத்தில் குழந்தைகளுக்கு அவர்களது பெற்றோர் உணவை அள்ளி கொடுக்கும் போது குழந்தைகள் தாங்கள் குண்டாகி விடுவோம். அழகு குறைந்து விடும் என்று சொல்லி உணவை உண்ண மறுத்துவிடுகிறார்கள் என்பது!

தேசிய குடும்ப சுகாதார கருத்தாய்வு முடிவு படி பெரும்பான்மையாக மோடி பதவியில் இருந்த காலத்தில் குழந்தைகளின் ஊட்டசத்து குறைபாடு 45% சதத்தில் இருந்து 47% சதமாக உயர்ந்தது.இது இந்திய சராசரியை விட அதிகம் என்பது குறிப்பிட தக்கது.இது மூன்று வயதுக்கும் குறைவான குழந்தைகள் பற்றி எடுக்க பட்ட புள்ளிவிபரம்! பச்சிளம் குழந்தைகள் கூட அழகுணர்ச்சி அதிகம் கொண்டு தன் தாய் பால் கொடுக்க, தான் குண்டாகி விடுவோம் என்று சொல்லி குடிக்க மறுத்து விடுவதால் குழந்தைகளுக்கு ஊட்ட சத்து குறைந்து
காணபடுவதாக கூறியுள்ளார்.இந்த புரட்சி குஜராத்தில் மட்டும் தான் நடக்கும்!.

அந்த பேட்டியில் ஹசாரேவுக்கும் ஒரு ஆப்பு வைத்துள்ளார். குஜராத்தில் மக்கள் சத்து குறைந்து  சோகையாக இருப்பதற்கு காரணம் அங்கு பெரும்பான்மையான மக்கள் சைவ உணவு பழக்கம் கொண்டு இருப்பது தான் என்றார். ஏற்கனவே ஹசாரே மகாராஷ்டிர
மாநிலம் ராலேகான் பகுதியில் அசைவ உணவு சாப்பிட கூடாது என்று  சட்ட விரோதமாக கட்டை பஞ்சாயத்து செய்து வருவது உலகறிந்தது. ( Dalit families were compelled to adopt a vegetarian diet. Those who violated these rules — or orders — were tied to a post and flogged.)அவருக்கு சவுக்கடி கொடுக்கும் விதமாக சைவ உணவு பழக்கம் தான் குஜராத்தின் சத்து குறைபாடிற்கு காரணம் என்று கூறியுள்ளார். எந்த முடிவையும் இரும்பு கரம் கொண்டு நடைமுறை படுத்தும் மோடி, குஜராத் மக்கள் அனைவரையும் கட்டாயம் அசைவ உணவு உண்ண ஆனையிட்டு விடுவார் என்ற பயம்  RSS இயக்கத்துக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது!

--