Sunday, January 30, 2011

சித்தாந்தமா? சுயலாபமா? தீர்மானிக்க வேண்டிய நேரம்

கம்யூனிசமும் முதலாளித்துவமும் சம அளவில் இருந்த போது உலகளவில் கம்யூனிச நாடுகளை எதிர்த்து போராட மேலை நாடுகளுக்கு ஒரு காரணம் தேவை பட்டது. கம்யூனிசத்தை சர்வாதிகாரம் என்று சொல்லி உலகெங்கிலும் மக்களாட்சியை கொண்டு வருவதையே தங்கள் சித்தாந்தம் என்று கூறி அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். கம்யூனிசம் மறையும் வரை அதில் எந்த பிரச்ச்னையும் இல்லை. அதன் பிறகு கூட மேல் நாட்டு வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் சர்வாதிகார ஆட்சியாளர்களை ஆட்சியிளிருந்து நீக்க அதே சித்தாந்தம் தொடர்ந்தது.

தங்களது வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் சர்வாதிகார ஆட்சியாளர்களை நீக்க ராணுவமும், சாதகமான சர்வாதிகாரிகளுக்கு அறிக்கையும்( கலைஞர் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்புவாரே அது போல்!) ஆயுதமானது. சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த நாடுகளில் மேலை நாடுகளுக்கு ஆதரவனவர்களால் வண்ண புரட்சிகள் நடந்தன.

தனது வளர்ச்சிக்கு சாதகமான சர்வாதிகளை எதிர்த்து மக்கள் மக்களாட்சி கேட்டு போராடினால் என்ன செய்வது. அவ்வாறு போராடுபவர்கள் தேர்தலில் நின்று வெற்றி பெற்று மேலை நாடுகளின் interestகு எதிராக செயல் பட்டால் என்ன செய்வது?

அந்த நிலை தற்போது ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே வண்ண புரட்சி நடந்த நாடுகளில் மாற்று புரட்சி நடக்க ஆரம்பித்து விட்டது. தற்போது டுனிசியா எகிப்து போன்ற நாடுகளில் நடைபெரும் புரட்சி புதிய மாற்றத்தை நோக்கி கொண்டு செல்கிறது.

ஜார்ஜ் புஷ் இரண்டாம் முறையாக பதவி ஏற்ற போது சொன்னது

"America's vital interests and our deepest beliefs are now one." The claim was that the source of threats to the welfare and security of the wealthy democratic world lay in the unfreedom of the populations of authoritarian countries:"

இனி சித்தாந்தம் முக்கியமா? சுய லாபம் முக்கியமா என அனைத்து நாடுகளும் அறிவிக்க வேண்டிய நாள் வந்துவிட்டது.

--

No comments: