Saturday, January 29, 2011

கோவில் இல்லா மதுரை வீரன்

அரசு திட்டங்களை செயல் படுத்தும் போது அத்திட்டங்களுக்கு செலவிடும் பணத்தை அபகரிக்கும் அதிகாரிகள் பற்றி தினந்தோறும் படிக்கிறோம். ஆனால் மக்களின் வறுமையை போக்கும் ஒரு நீர்பாசன திட்டத்தை தன் மனைவியின் நகைகளை விற்ற பணத்தை கொண்டு கட்டி முடித்த ஒரு அரசு அதிகாரி பற்றி அறிந்து கொள்ள ஆச்ச்ரியமாக உள்ளதா? அதுவும் அந்த அதிகாரி தன் தாய் நாட்டு மக்களுக்காக செய்யாமல் வேறு நாட்டு மக்களுக்காக செய்தார் என்றால் நம்ப முடிகிறதா?

தமிழக கேரள எல்லையில் இருக்கும் பெரியார் அணை பற்றி பெரும்பாலோருக்கு தெரிந்திருக்கும் பழைய மதுரை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் பல பகுதி விவசாய நிலங்களாக ஆனதற்கும் அந்த பகுதியில் உள்ள மக்கள் வறுமையின் பிடியிலிருந்து விடுபட்டதற்கும் இந்த அணை தான் முக்கிய காரணியாக இருக்கிறது.தற்போது கேரள அரசு கடலில் கலக்கும் நீரை தமிழகத்துக்கு தர மறுப்பதால் இந்த அணை பற்றியும் அது சார்ந்த பிரச்ச்னையும் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.ஆனால் இந்த அணை கட்ட பட்ட வரலாறு பற்றி தெரிந்தால் அனைவரும் ஆச்சரிய பட்டு போவீர்கள்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பென்னிகுயிக்(John Pennycuick) என்ற அதிகாரி தமிழகத்தின் தண்ணீர் பிரச்ச்னையை எப்படி தீர்ப்பது என்பது குறித்து ஆராய்ந்தார். அப்போது அவரது மனதில் தோன்றிய திட்டம் பெரியாறு அணை திட்டம். கேரளாவில் வீணாக கடலில் கலக்கும் நீரை தமிழகம் நோக்கி திருப்பி விட்டால் தமிழகத்தின் தென் மாவட்டங்களான மதுரை மற்றும் ராமனாதபுரம் ஆகியன பாசன வசதி பெறும் என்பது அவரது திட்டம். ஆனால் தண்ணீரை தமிழகத்தை நோக்கி திருப்பி விட்டால் அது மலையை கடந்து வர வேண்டும். எனவே அந்த திட்டத்திற்கு நிறைய செலவாகும் . எனவே ஆங்கிலேய அரசு அதற்கு ஒத்து கொள்ளவில்லை. ஆனால் பெனின்குயிக்கோ தன் முயற்சியை தளர விடாமல், அந்த திட்டத்தால் பயனடையும் லோக்கல் தொழிலாளர்களை கொண்டு வேலையை குறைந்த செலவில் முடிப்பதாக வாக்குறுதி கொடுத்து அரசிடம் வாதாடி இந்த திட்டத்துக்கான ஒப்புதலை பெற்றார்.

ஆனால் இந்த திட்டம் நடந்து வந்த போது செலவு அதிகமானதால் அரசு இந்த திட்டத்தை பாதியில் கை விட்டு விட்டது. ஆனாலும் மனம் தளராத ஆங்கிலேய அதிகாரி இங்கிலாந்து சென்று தன் மனைவியிடம் இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தையும் அதனால் பயனடைய போகும் ஏழை மக்களை பற்றியும் எடுத்து கூறினார். அவரது மனைவி தனது நகைகளையும், சில சொத்துக்களையும் விற்று பணமாக தன் கணவரிடம் கொடுத்தார். அந்த பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்து, அணை கட்டும் திட்டத்தை தொடர்ந்து வெற்றிகரமாக முடித்தார்.

அவருடைய தியாகம் இன்றைக்கு மதுரை பகுதியை சேர்ந்த பல லட்சம் மக்களை வ்றுமையின் பிடியிலிருந்து மீட்டுள்ளது. அரசு பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளுக்கு எத்தனையோ சிலைகளும், நகர்களின் பெயரும் இருந்தாலும், பென்னிகுயிக்கிற்கு மதுரை பொது பணித்துறை அலுவலகத்தில் ஒரு சிலை மட்டுமே உள்ளது.ஒவ்வொரு தமிழனும் தன் வாழ்நாளில் நன்றியுணர்வோடு பார்க்க பட வேண்டியவர் பென்னிகுயிக்.

தமிழக கிரிகெட் ரசிகர்களும் இந்த அதிகாரியிடம் நன்றி கடன் பட்டவர்கள். ஏன் என்கிறீர்களா? இவர் தான் சென்னை சேப்பாக் ஸ்டேடியத்தை முதல் முதலாக கிரிகெட் விளையாட தயார் செய்தவர். இவர் அரசிடமிருந்து கிரிகெட் கிளப்பிற்காக சேப்பாக் ஸ்டேடியத்தின் இடத்தை வாங்கி கிரிகெட் மைதானத்தை உருவாக்கினார்.

இவர் ஒரு கோவில் இல்லாத மதுரை வீரன் கடவுள் தானே?

இன்னொரு பதிவில் நாம் வில்லனாக பார்க்கும் ஒரு ஆங்கிலேய அதிகாரி இந்தியாவிற்காக செய்த தியாகத்தை பற்றி பார்ப்போம்.


--

1 comment:

Anonymous said...

good info.
thanks for sharing