Tuesday, January 18, 2011

இந்தியா - ஈரான் - அமெரிக்கா - பெட்ரோல்

இந்தியாவின் பெட்ரோல் தேவையை பூர்த்தி செய்வதில் இரண்டாவது இடத்தை வகிப்பது ஈரான். அது இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 15% பூர்த்தி செய்கிறது. ஒபாமாவின் பதவி ஏற்ற பின் ஈரானுக்கு எதிரான பொருளாதார தடையை அமெரிக்கா தீவிரமாக அமுல் படுத்த தொடங்கி உள்ளது.

இந்தியா ஈரானிடமுருந்து எண்ணெய் வாங்கும் போது பணத்தை ஈரானிய வங்கி மூலமாக ஈரானுக்கு பைசல் செய்யும். இந்த பண பரிவர்த்தனையில் ஈடு பட்ட வங்கிகள் ஈரானிய அணு ஆயுத உற்பத்திக்கு உதவுவதாக அமெரிக்கா பல காலமாக குற்றம் சாட்டி வந்தது, இந்த பரிவர்த்தனையை நிறுத்த அமெரிக்கா கடுமையான அழுத்தத்தை இந்தியாவிற்கு கொடுத்து வந்தது. ஒபாமாவின் இந்திய விஜயத்தின் போது இந்த அழுத்தம் அதிகமானது. தற்போது இந்தியா அமெரிக்காவின் அழுத்தத்துக்கு பணிந்து ஈரானுடனான தற்போதைய பண பரிவர்த்தனையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அதற்கு மாற்றாக எதையும் பரிந்துரைக்கவில்லை. ஆனால் ஈரானுடனான கச்சா எண்ணெய் வர்த்தகம் மட்டும் தொடரும் என்று அறிவித்துள்ளது.

சில காலத்துக்கு முன் இந்தியாவின் எண்ணெய் தேவைக்காக ஈரானுடன் நெருங்கிய உறவை விரும்பிய மணி சங்கர் அய்யர், பெட்ரோலிய அமைச்சரவையிலிருந்து மாற்ற பட்ட விவகாரத்திலும் மேலை நாடுகளின் அழுத்தம் இருப்பதாக பரவலாக பேச பட்டது.

எண்ணெய் வளம் அதிகம் இருந்தாலும், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஈரானில் மிகவும் குறைவு. எனவே தனது சுத்திகரிக்க பட்ட பெட்ரோல் தேவையை பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வந்தது. இந்தியாவை சேர்ந்த ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் பெட்ரோலை ஈரானுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. தற்போது அமெரிக்காவின் வர்த்தக தடைக்கு பயந்து ரிலையன்ஸ் நிறுவனம் இந்த ஏற்றுமதியை நிறுத்தி விட்டது. இந்த இடத்தை தற்போது சீனா பிடித்து விட்டது.

ஈரானுக்கு எதிரான தடையை உலக நாடுகளுக்கு கடுமையாக பின் பற்ற அழுத்தம் கொடுத்தாலும் அமெரிக்கா, தன் நாட்டு கம்பெனிகளை ஈரான் போன்ற நாடுகளுடன் வர்த்தகம் செய்ய தற்போது அனுமதி அளித்து உள்ளது .

இனி இந்திய ஈரான் பெட்ரோல் வர்த்தக பிரச்சனைக்கு வருவோம். ஈரான் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விற்பதை நிறுத்தினால் இந்தியாவில் மிக பெரிய பெட்ரோல் தட்டுபாடு ஏற்படும். அதனால் மிக பெரிய அளவில் பெட்ரோல் விலை ஏற்றமும் ஏற்படும். அதுமட்டுமன்றி இந்தியா தன் 15% தேவைக்கு உலக எண்ணெய் மார்கெட்டை நோக்கி சென்றால் உலகளவில் கச்சா எண்ணெய் விலையும் அதிகமாகும். ஆனால் ஈரானுக்கு இந்தியாவுடனான வர்த்தகம் மிகவும் தேவையானது என்பதால் இந்திய - ஈரான் பெட்ரோல் வர்த்தகம் உடனடியாக தடை பட வாய்ப்பில்லை.

இந்த வர்த்தகம் தொடர புதிய பண பரிவர்த்தனை எப்படி நடப்பது? ஈரான் அதற்கு ஒரு வழிமுறை கூறி உள்ளது. அதன் படி ஈரானிய வங்கிக்கு ஐரோப்பாவில் உள்ள இந்திய ஸ்டேட் வங்கி கிளை மூலம் யூரோவில் கச்சா எண்ணெய்க்கான பணத்தை கொடுக்க வேண்டும்.

இதில் பிரச்ச்னை என்னவென்றால் இந்த பரிவர்த்தனையை இந்திய ஸ்டேட் வங்கி நடத்தினால், அமெரிக்காவால் இந்திய ஸ்டேட் வங்கியை தடை செய்ய வேண்டிய நிறுவனங்களின் பட்டியளில் சேர்க்க வாய்ப்புள்ளது! இந்த பரிவர்த்தனை நடக்காவிட்டால் இந்தியாவின் வளர்ச்சிக்கே பேராபத்து. இந்தியா இந்த பிரச்ச்னையை எப்படி கையாள போகிறது என்று உலகமே பார்த்து கொண்டுள்ளது.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது ஈரான் கூறியுள்ள வர்த்தக முறை. இதன் படி எண்ணெய்க்கு மாற்றாக ஈரானுக்கு பணத்தை யூரோவில் கொடுக்க வேண்டும்.இது நாள் வரை இந்திய ஈரான் வர்த்தகம் டாலர் அடிப்படையில் நடக்கிறது. உலகளவில் பெரும்பாலான எண்ணெய் வர்த்தகம் டாலர் அடிப்படையில் ந்டக்கிறது. டாலரின் மதிப்பு அதிகமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். இந்த வர்த்தகம் யூரோ அடிப்படையில் நடக்க ஆரம்பித்தால் உலக வரலாற்றில் இது ஒரு முக்கியமான செய்தியாக இருக்கும். இதற்கு முன் ரஸ்யாவும் சீனாவும் டாலர் அடிப்படை இல்லாமல் வர்த்தகம் செய்ய முடிவு செய்துள்ளது குறிப்பிட தக்கது.

--

4 comments:

Unknown said...

நமது பதவியில் இருக்கும்பிரதமர், அமரிக்கா என்ன சொன்னலும் செய்வார் அவரிடம் இதற்குமேல் எதையும் எதிர்பாரிக முடியாது

சதுக்க பூதம் said...

வாங்க வினோத். அதுக்கு கைமாறாக எதாவது நன்மை கிடைக்கிறதா என்று தெரியவில்லை

தேடல் said...

மக்கள் அரசியல்வியாதிகளுக்கு அடிமை,
அரசியல்வியாதிகள் அமெரிக்காவுக்கு அடிமை, திருந்தாத ஜென்மங்கள்...

பகிர்வுக்கு நன்றி தல..

சதுக்க பூதம் said...

நன்றி தேடல்