Sunday, September 26, 2010

வாழும் வள்ளலார் - நாரயணன் கிருஷ்ணன் CNN Hero ஆக வாக்களியுங்கள்


வாடிய பயிரை காணும் போதெல்லாம் வாடினார் ராமலிங்க வள்ளலார். பசியில் வாடும் அனைவருக்கும் உணவளிப்பதே இறைப்பணி என்று வாழ்ந்தார்.இந்த காலத்திலும் வீதியில் அனாதையாய் இருக்கும் ஏழைகளுக்கு உணவளிப்பததையே வாழ்வின் லட்சியமாக கொண்டு ஒருவர் வாழ்கிறார் என்றால் கேட்பதற்கே ஆச்சரியமாக உள்ளது அல்லவா? இந்த அதிசயத்தை நடத்தும் நல்ல மனிதர் மதுரையை சேர்ந்த திரு.நாராயணன் கிருஷ்ணன். ஸ்டார் ஹோட்டலில் வேலை பார்த்து வந்த அவர் வீதியில் சமுதாயத்தால் கைவிட பட்டு ஆனாதையாய் திரியும் ஏழைகளுக்கு தினமும் தானே உணவு தயார் செய்து அவர்களது பசியை போக்கி வருகிறார்.தினமும் 400 பேருக்கும் மேல் 3 வேளை உணவு அளித்து வருகிறார்.







உலகளவில் நல்ல மாற்றத்தினை கொண்டு வருபவர்களில் 10 பேரை தேர்ந்தெடுத்து மக்கள் வாக்களிப்பின் மூலம் அவர்களில் ஒருவரை ஒவ்வொரு ஆண்டும் ஹீரோவாக தேர்ந்தெடுக்கும் CNN. இந்த வருடம் CNN தேர்ந்தெடுத்த 10 பேரில் நாராயணன் கிருஷ்ணனும் ஒருவர். இவருக்கு விருது கிடைத்தால் விருதுக்கு தான் பெருமையாக இருக்கும். ஆனால் இந்த விருதின் மூலம் அவர் பணி மேலும் வளர வாய்ப்புள்ளது. நீங்களும் அவருக்கு ஆதரவாக வாக்க அளிக்க இங்கு சென்று வாக்களிக்களாம்.

http://heroes.cnn.com/vote.aspx


இதை படிக்கும் பதிவர்கள் தங்கள் வலை பூவில் அவருக்கு ஆதரவாக வாக்களிக்க வாசகர்களுக்கு ஒரு லிங்க் கொடுத்தால் நன்றாக இருக்கும்.நவம்பர் 18 தான் வாக்களிக்க கடைசி நாள்.

CNN பத்திரிக்கையின் செய்தி அளிக்கும் விதம் குறித்து எனக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தாலும் இந்த CNN Hero என்ற வகையில் பல நல்ல உள்ளங்களை உலகுக்கு அறிமுக படுத்துகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இது பாராட்ட பட வேண்டிய செயல். பிற டி.வி நிறுவனங்கள் மற்றும் பிரபல செய்தி தாள்கள் கடைபிடிக்க வேண்டிய செய்தி.

--

Wednesday, September 22, 2010

இந்தியாவுக்கான ஒளி மயமான எதிர்காலம்

ஆண்டு முழுவதும் ஒட்டு மொத்த இந்தியாவுக்கு ஆன மத்திய பட்ஜெட்டின் ஆரம்ப கல்வி செலவு(பட்ஜெட்டில் ஒதுக்கபட்டது) - 36000 கோடி

ஒபாமா இந்திய வரும் போது போயிங் நிறுவனத்திடம் இருந்து C-17 Globmaster III ரக விமான படைக்கான விமானம் 10 மட்டும் வாங்க ஆகும் செலவு - 26680 கோடி

--

Sunday, September 19, 2010

சீன பணத்தை சேமிப்பு நாணயம்(Reserve Currency) ஆக்கிய மலேசியா

இது நாள் வரை சீனா தன் சேமிப்பு கரன்ஸியாக டாலரை வைத்திருக்குமா அல்லது யூரோவுக்கு மாறுமா அல்லது தங்கம் வாங்கி குவிக்குமா என்ற செய்திகளே உலக பொருளாதாரத்தில் விவாதத்தில் இருந்தது. நீண்ட நாட்களாக எதிர்பார்க்க பட்டு கொண்டு இருந்த இன்னோரு செய்தி தற்போது வந்துள்ளது. பொருளாதாரத்தில் மிக பெறிய அளவில் முன்னேறி வரும் சீனாவின் யுவானையே பிற நடுகள் சேமிப்பு கரண்சியாக சேர்க்க தொடங்கும் நாள் விரைவில் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. சீனாவே இந்த முயற்சிக்கு தடை விதித்து வந்தது. சீனா தனது தடைகளை சிறிய அளவில் விளக்க ஆரம்பித்துள்ளது.

அந்த நிலையில் முதன் முதலாக சீனாவின் பாண்டுகளை வாங்கி தனது சேமிப்பு கரன்ஸியின் ஒரு பங்காக மாற்றி மலேசியா வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. நீண்ட காலங்களுக்கு பிறகு சீனாவின் நாணயம் சர்வ தேச சேமிப்பு கரண்சியாக மாறினால், அந்த மாற்றத்தை முதன் முதலாக கொண்டு வந்த நாடு என்ற பெயரை மலேசியா பெருகிறது. பினான்சியல் டைம்ஸ் பத்திரிக்கை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. மலேசியாவை தொடர்ந்து வேறு சில நாடுகளும் சீனாவின் நாணயத்தை சேமிப்பு கரன்ஸியாக வாங்க தொடங்கியுள்ளதாக கூறினாலும் அந்த நாடுகளின் பெயர்களை அந்த செய்தி தாள் வெளியிடவில்லை.

சீனா பெருமளவில் இந்த நடைமுறையை அனுமதிக்குமா என்பது கேள்விக்குறியே. ஏனென்றால் அதன் விளைவாக சீனாவின் நாணய மதிப்பு கூட வாய்ப்புள்ளது. அது மட்டுமன்றி சீனா அமெரிக்க பாண்டுகளை வாங்குவதை போல் அமெரிக்கா சீனாவின் பாண்டுகளை தடையின்றி வாங்க ஆரம்பித்தால் சீனாவின் நாண்ய மதிப்பு உயர்ந்து அதன் ஏற்றுமதி தொழில் பாதிப்படைய வாய்ப்புள்ளது. எனவே சீனாவின் நாணயம் உலக சேமிப்பு நாணயத்தில் ஒரு முக்கிய பங்கை பிடிக்க பல வருடங்கள் ஆகலாம்.

--

Saturday, September 18, 2010

அமெரிக்கா , சீனா --இரு செய்திகள் இந்தியாவிற்கு?

கடந்த வாரம் இரு வேறு செய்தி தாள்களில் வந்த இரு செய்திகள் அனைவரின் சிந்தனைக்கும் உரியது.

முதலில் நியுயார்க் டைம் செய்திதாளில் வந்த இந்த செய்தி பற்றி பார்ப்போம்.

இந்த செய்தி அமெரிக்கா சிறந்த நாடுகள் வரிசையில் 11ம் இடத்துக்காக தள்ள பட்டதாக நியீஸ் வீக் பத்திரிக்கையில் வந்த செய்தியை பற்றிய பிரெட்மேன் இன் அலசல். அமெரிக்காவின் இந்த பின்னைடைவுக்கு முக்கிய காரணம் அமெரிக்காவில் பள்ளியிலேயிருந்து மாணவர்கள் படிப்பின் ஆர்வம் குறைந்து வருவது தான் என்கிறார்.மேலும் அவர் முக்கிய காரணமாக கூறுபவை

the decline in U.S. education, competitiveness and infrastructure, as well as oil addiction and climate change.

அவர் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு போட்டியாக இந்தியா, சீனா வருவதற்கான காரணங்கள் பற்றி பின் வருபவற்றை குறிப்பிடுகிறார்

China and India have been catching up to America not only via cheap labor and currencies. They are catching us because they now have free markets like we do, education like we do, access to capital and technology like we do, but, most importantly, values like our Greatest Generation had

இதில் முக்கியமாக நாம் பார்க்க வேண்டியது இந்தியாவின் கல்வி வளர்ச்சி பற்றியது.முதலாவதாக இந்தியாவில் பல்கலை கழக மற்றும் உயற் கல்வி கூடங்களின் தரம் பற்றி பார்ப்போம். மேலை நாடுகளின் இந்த வேகமான வளர்ச்சிக்கு முக்கிய காரணம் பல்கலை கழகங்கள். அனைத்து அடிப்படை ஆராய்ச்சிகளும் அங்கு பல்கலை கழகங்களில் தான் நடைபெருகிறது. அடிப்படை ஆராய்ச்சியில் கண்டு பிடிக்க பட்ட உண்மைகளை கொண்டு அதை சந்தை படுத்தலுக்கு தேவையான பொருளாக மாற்றும் ஆராய்ச்சியும் பல்கலை கழகங்களில் தான் நடக்கும். அதற்கு பின் தனியார் கம்பெனிகள் உள் புகுந்து சிறிது முதலீடு செய்து மீண்டும் பல்கலை கழகங்களின் உதவியோடு ஆராய்ச்சியை தொடர்ந்து சந்தைக்கு உரிய பொருளாக கொண்டு வருவார்கள். எனவே பல்கலை கழக ஆராய்ச்சி என்பது முதலாளித்துவத்தின் முதுகெலும்பு. இந்தியாவிலோ முதலாளித்துவ பாதை தான் ஏற்றது என்று தேர்ந்தெடுத்தாலும் பல்கலைகழக ஆராய்ச்சியை உயர்த்துவது பற்றி யாருமே சிந்திப்பது இல்லை.

இங்கு உள்ள மத்திய கல்வி அமைச்சர்களின் குறிக்கோள் எல்லாம் எவ்வாறு இந்தியை அனைத்து மாநிலங்களிலும் புகுத்தி, ஆங்கிலத்தை ஒழித்து ஒட்டு மொத்த இந்திய கல்வி கட்டுமானத்தையே சீரழிப்பது என்பது பற்றி தான் உள்ளது.

எதோ வளர்ந்த நாடுகள் தான் பல்கலை கழக ஆரய்ச்சியில் முன்னேற்றம் செலுத்துகிறது என்று இல்லை. சீனா பல்கலை கழக ஆராய்ச்சிக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளது. தற்போது அமெரிக்காவில் திறமை வாய்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு 5 வருடத்துக்கு 1 மில்லியன் டாலர் என்று நிதி உதவி அளித்து சீனா பல்கலைகழகத்துக்கு அழைக்கிறது. அவர்களுக்கு கொடுக்க படும் டார்கெட் எல்லாம் சயின்ஸ், நேச்சர் போன்ற உயர் தர அராய்ச்சி இதழ்களில் கட்டுரை வெளியிட வேண்டும் என்பதே.அவ்வாறு கட்டுரை வெளியிட இல்லை என்றால் 5 வருடத்துடன் அவர்களுடைய கான்ட்ராக்ட் விலக்க படும்.மிக பெரிய விஞ்ஞானிகள் அங்கு சென்று ஆராய்ச்சி செய்வதால் அங்கு தரமான ஆராய்ச்சி ஆரம்பிக்க படுவதுடன், பல்கலைகழகத்தில் படிக்கும் மாணவர்களின் ஆராய்ச்சி திறன் அதிகமாகிறது. பிறகு ஒவ்வோரு மாணவனும் தரமான மற்றும் லேட்டஸ்டான ஆரய்ச்சி செய்ய வாய்ப்பு கிடைக்கிறது.

இந்தியாவின் பல்கலை கழகங்களில் பல மாணவர்கள் நல்ல தரமான ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று சேர்கிறார்கள். ஆனால் பல்கலைகழகங்களில் உள்ள பேராசிரியர்களின் அறிவோ 40 வருட பின் தங்கியதாக உள்ளது. அவர்கள் கொடுக்கும் ஆராய்ச்சி தலைப்பும் ஒன்றுக்கும் உதவாத தலைப்பாக இருக்கும். பல்கலைகழகங்களில் நடக்கும் அரசியலில் மாணவர்கள் வீழ்ந்து கடைசியில் அந்த ஜோதியில் ஐக்கியமாகிவிடுகிறார்கள். தற்போது மத்திய அரசு ஆராய்ச்சிக்கு என பல கோடி செலவு செய்தாலும், பலன் மிக குறைவே. அந்த பிராஜெக்ட் வாங்கவே சில சமயம் நீங்கள் திறமையான அரசியல்வாதியாக இருக்க வேண்டும். இந்திய பல்கலை கழக ஆராய்ச்சி பற்றிய என்னுடைய அனுபவத்தை தனி பதிவாக இடுகிறேன்.

அடுத்தது கல்லூரிகளில் கல்வி தரம். 3 முதல் 6 ஆண்டுகளுக்கு மாணவர்கள் கல்வி கற்க கல்லூரிகளுக்கு செல்கிறார்கள். அங்கு கொடுக்க படும் கல்வியின் தரம் மிக கவலை கூறியதாக உள்ளது. மேலை நாடுகளில் ஒரு பாடத்தில் மேல் படிப்பு வரை படித்தால் உண்மையிலேயே அவருக்கு அந்த பாடத்தில் நுண்ணிய அறிவு இருக்கும். ஆனால் இந்தியாவிலோ கல்லுரி முடித்து வெளி வரும் மாணவர்களுக்கு அந்த பாடத்தில் இருக்கும் அறிவு மிக மிக குறைவு. பாடத்தின் சிலபஸ் எல்லாம் மிக நன்றாகவே உள்ளது. ஆனால் கல்வி தரம் மிக குறைவாக உள்ளது. லோக்கல் கல்லூரிகளை சேர்ந்த ஆசிரியர்கள் ,பள்ளி கூடத்தில் படிக்கும் போது அந்த பாட புத்தகத்துக்கு உள்ள தரத்தை விட குறைவாக ஒவ்வொரு பேப்பருக்கும் புத்தகம் போட்டு விடுகிறார்கள். மாணவர்களும் அதை மனபாடம் செய்து விட்டு சென்று வாந்தி எடுத்து விடுகிறார்கள். மேலை நாடுகளில் உள்ள மிக பெரிய பேராசிரியர்கள சிந்தனையை தூண்டும் விதமாக புத்தகங்கள் போடுகிறார்கள். அதை வாங்கி யாரும் படிப்பது கிடையாது. மேலும் ஆராய்ச்சி ஜேர்னல்கள் போன்றவற்றை புரட்டி பார்த்து படிப்பது என்பது விரல் விட்டு எண்ணும் நிலையில் தான் உள்ளது(அவை கல்லூரிகளில் வர வழிப்பதே குதிரை கொம்பு)

பல்கலை கழக ஆராய்ச்சி இப்படி என்றால் மற்றொரு முக்கிய பிரச்சனை கிராமபுற பள்ளிகளின் கல்வித்தரம்.கிராமபுறங்களில்(முக்கியமாக அரசு பள்ளிகளில்) உள்ள படிக்கும் பெருபான்மையான மாணவர்களின் கல்வி தரம் மிக மோசமாக உள்ளது. தற்போது தமிழகமெங்கும் கல்லூரிகள் பல அரசு மற்றும் தனியார் துறைகளில் தொடங்க பட்டதாலும், ஏழை மக்களுக்கு பள்ளி இலவச கல்வி கிடைப்பதாலும், அரசு உணவு பொருட்களை இலவசமாக வழங்குவதால் ஏழைமக்களின் சேமிப்பு மூலம் அவர்கள் குழந்தைகளின் கல்விக்கு செலவிட முடிவதாலும், அதை விட முக்கியமாக ஏழை மக்கள் தங்கள் குழைந்தைகளின் படிப்பு மற்றும் வளர்ச்சிக்கு பல தியாகங்களை செய்வதாலும் கிராம புரங்களிளிருந்து ஏழை மக்கள் தங்கள் பிள்ளைகளை கல்லூரி படிப்புக்கு அனுப்புவது அதிகரித்துள்ளது. அவர்களை பள்ளி படிப்பில் வலுவான கட்டுமானத்தை ஏற்படுத்த வேண்டிய கிராம புற பள்ளிகள் தன் கடமையிலிருந்து தவறுகின்றனர். இதற்கு பல காரணம் உள்ளன, ஆசிரியர்களின் அலட்சியம்,முக்கியமாக ஆசிரியர்கள் நியமிக்க படாமல் இருப்பவை, அதை விட முக்கியமாக ஒவ்வொரு வகுப்பிலும் ஏதும் படிக்காமலேயே பாசாகி வந்து விடலாம் என்ற நிலமை. கடுமையான கஷ்ட்டதிற்கு நடுவில் தன் பிள்ளைகளை கல்லூரிக்கு அனுப்புகிறார்கள் பெற்றோர். ஆனால் கல்வி தரத்தில் போட்டி போட முடியாததால் அவர்களால் நல்ல வேலைகளுக்கும் போட்டியிட்டு செல்ல முடியாத நிலை.அரசு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடின் பயனையும் முந்தய தலைமுறையில் முன்னேறிய பெற்றோரின் பிள்ளைகளே அனுபவிக்கும் நிலை. நேற்று பல்கலை கழகத்தில் ஆசிரியராக இருக்கும் என் நண்பரிடம் பேசி கொண்டு இருக்கும் போது அவர் தற்போது கிராம புறத்திலிருந்து வந்திருக்கும் மாணவர்களின் தரம் பற்றிய கூறிய செய்திகள் மிக அதிர்ச்சியாக இருந்தது(அவர் கிராம புற மாணவர்கள் நன்கு படிக்க வேண்டும் என்று, கிராம புற மாணவர்களுக்கு உதவ பல முயற்சி எடுப்பவர். ஆனால் அவர் உதவ முன் வந்தாலும் அதை ஏற்று முன்னேற 90% மணவர்கள் தயாரக இல்லை என்பது கொடுமை)

இந்த நிலை தொடர்ந்தால் ஒரு புறம் கல்வியின் தரம் குறைவதுடன் மறுபுறம் ஏழை மக்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது தேவையா? என்று எண்ண தோன்றக்கூடிய நிலை வந்தாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை.

மற்றொரு செய்தி பினான்சியல் டைம்ஸ் பத்திரிக்கையில் வந்திருக்கும் இந்த செய்தி. இது சீனாவின் சமீபத்தய பொருளாதாரம் மற்றும் வணிப ரீதியான செயல்பாடுகள் பற்றியது.

சீனா தற்போது மூல பொருட்கள் அதிகம் உள்ள தென் அமெரிக்க மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் பெரும் அளவு மூல பொருட்கள் சார்ந்த துறைகளில் முதலீடு செய்கிறது.இதில் குறிப்பிட தக்க நாடு பிரேசில். உலகளவில் மூலபொருட்கள் உற்பத்தியில் முக்கிய இடத்தை வகிப்பது பிரேசில். இங்கு தற்போது மூல பொருட்களோடு பெட்ரோலும் பெருமளவு கண்டு பிடிக்க பட்டுள்ளது.கடந்த ஆண்டு வரை 100 மில்லியனுக்கும் குறைவாக இருந்த பிரேசிலுக்கான சீன முதலீடு இந்த ஆண்டு 10 பில்லியனை தாண்டும் என்று எதிர் பார்க்க படுகிறது.உதாரணமாக சீனா, பிரேசிலின் எண்ணெய் கம்பெனியான பெட்ரோபிராசில் 10 பில்லியன் டாலரும் , இரும்பு கம்பெனியில் 1.25 பில்லியனும் முதலீடு செய்துள்ளது.மூல பொருட்களின் முதலீடு மட்டுமல்ல. இரயில் போக்குவரத்து, கப்பல் கட்டுமானம், மின் உற்பத்தி நிலையங்கள் என உயர் தொழில்நுட்ப துறைகளிலும் தென் அமெரிக்க மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. சீனாவிடம் அதிகம் இருக்கும் அன்னிய செலாவனி கையிருப்பு இதற்கு பெருமளவில் கை கொடுக்கிறது. சீனா அமெரிக்க பாண்டுகளில் மட்டும் முதலீடு செய்து வளர்ந்த நாடுகளை மட்டும் நம்பி இருக்காமல் வளரும் நாடுகளின் தொழிற்துறையிலும் தற்போது கவனம் செலுத்த தொடங்கி உள்ளது.

கீழ் காணும் வர்த்தக ஒப்பந்தத்தை பார்த்தால் இரு நாடுகளுக்கான வர்த்தகம் எப்படி நடக்கிறது என்று புரியும்.வேல் எனப்படும் பிரேசிலின் இரும்புதாது வெட்டி எடுக்கும் கம்பெனி சீனாவை சேர்ந்த இரு வங்கிகளிடமிருந்து 1.23 பில்லியன் கடன் வாங்க உள்ளது. இந்த கடன் மூலம் அது 12 மிக பெரிய கார்கோ கப்பல்களை வாங்கும். அந்த கப்பல்கள் சீனாவில், சீன தொழிலாளிகளால் தயாரிக்க படும். அவ்வாறு வாங்கிய கப்பல் பிரேசிலில் உற்பத்தி செய்த இரும்பை சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய உபயோக படுத்தபடும்.

தற்போது உலகளவில் டாலர் அடிப்படையில் நடக்கும் வர்த்தகத்தை சிறிது சிறிதாக குறைத்து சீனா தன்னுடைய நாணயத்தின் அடிப்படையில் நடத்த முயற்சிகள் எடுக்க தொடங்கி உள்ளது. உலகளவில் பெருமளவில் மூல பொருட்களை உற்பத்தி செய்யும் தென் அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்க நாடுகளும், உலகளவில் உற்பத்தி தொழிலில் முதலிடத்தில் இருக்கும் சீனாவும் தன் வர்த்தகத்தை முழுமையாக டாலரில் நடத்தாமல் சீனாவினுடைய நாணயத்தில் நடத்தினால் அதன் விளைவு உலக பொருளாதாரத்தில் மிக பெரியதாக இருக்கும்


சீனாவின் உற்பத்தி துறை வளர்ச்சி பற்றி அனைவருக்கும் தெரிந்ததே. இந்திய உற்பத்தி துறை தொழில் சீனாவுடன் போட்டி போட்டு கொண்டு வளர வேண்டிய நிலையில் உள்ளது. உற்பத்தி தொழிலுக்கு முக்கிய தேவை மனித உழைப்பு, மூல பொருட்கள் மற்றும் மின் மற்றும் எரிசக்தி. மனித உழைப்பு இந்தியா மற்றும் சீனாவில் எளிதாக கிடைக்கும். மின் தேவையை பூர்த்தி செய்ய இந்தியா எவ்வாறு "தெளிவான" திட்டமிடலுடன் செயல் படுத்துதல் உள்ளது என்பது பற்றி நான் கூற வேண்டிய அவசியம் இல்லை. உற்பத்தி தொழிலுக்கான அடிப்படை தேவையான் மூல பொருட்களை அடைய சீனா எவ்வாறு முயற்சி செய்கிறது என்று மேல் சொன்ன செய்தியில் பார்த்தோம். இந்தியா அது போன்ற பெரிய முயற்சிகளை எடுக்க வில்லை என்றால் வருங்காலத்தில் மூலபொருட்கள் பற்றாக்குறையால் அனைத்து தொழில்களும் சீனா நோக்கி செல்ல தொடங்கிவிடும்.ஏற்கனவே பல தொழில் துறைகளில் சீனா மூல பொருட்கள் சப்ளையை இந்தியாவிற்கு தடுப்பதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது.'

இந்தியாவில் தொழில்மயமாக்கள் அறைகுறையாக நடைபெற்று பின் மீண்டும் உற்பத்தி தொழிற்துறை நலிவடைந்தால் என்ன நடக்கும் என்று பார்ப்போம். தொழில்மயமாக்கள் நடை பெரும் போது கிராமத்தில் உள்ள சிறு ,குறு விவசாயிகள் தங்கள் நிலங்களை விற்று நகர் நோக்கி தொழிற்சாலைகளில் வேலை தேடி வந்து இருப்பார்கள். விவசாய கூலி தொழிலாளர்களும் நகர் நோக்கி வந்திருப்பார்கள். இதனால் கிராமபுரங்களில் நில உடமையின் அளவு அதிகமாகி, விவசாயியின் கையிருப்பு நிலத்தின் அளவு அதிகமாகும். கூலி தொழிலாளர்கள் கிடைப்பதும் அரிதாகும். தற்போது தமிழக கிராமத்தில் அந்த நிலை வர தொடங்கை உள்ளது. அதனால் விவசாயம் இயந்திர மயமாகும். அங்கு தொழிலாலர்களின் தேவையும் இருக்காது.சில காலம் கழித்து தொழில்துறை நலிவடைந்து தொழிலாளிகள் மீண்டும் கிராமத்திற்கு விவசாயம் செய்ய சென்றாலும் அங்கு வழி இருக்காது.அதன் சமூக மற்றும் பொருளாதார விளைவுகள் கடுமையானதாக இருக்கும்.

ஏற்கனவே பிரதமர் மன்மோகன் சிங் விவசாயத்தை நம்பி இருக்கும் மக்களின் பெரும்பாலோனோரை தொழிற்துறைக்கு கொண்டு செல்வதன் மூலம் தான் இந்தியாவின் வறுமையை ஒழிக்க முடியும் என கூறி உள்ளார். தொழிற் துறை வளர்ச்சி பிற்காலத்தில் இந்தியாவில் நிலையாக இருக்க தேவையான மூல பொருட்கள் சப்ளை பற்றியோ , மின் மற்றும் எனர்ஜி தேவையை சரி செய்வது பற்றியோ அவர் தெளிவாக சிந்தித்து செயல் பட்டு கொண்டிருக்கிறாரா?

--

Tuesday, September 14, 2010

கம்யூனிசத்துக்கு சமாதி கட்டும் கியூபா?

சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பின்னும், சீனா சந்தை வழி பொருளாதாரத்துக்கு முழுமையாக திரும்பிய பின்னும் உலக கம்யூனிச இயக்கத்துக்கு ஒரு பெரும் பின்னடைவாக இருந்தது. அதை பயன் படுத்தி முழுமையான சந்தை பொருளாதாரத்தை நோக்கி சென்ற உலகுக்கு கடந்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பொருளாதார வீழ்ச்சி அதிர்ச்சியாக இருந்தது. இது நாள் வரை கம்யூனிஸ்ட்டுகளுக்கு எடுத்து காட்டாக இருந்த கியூபா தற்போது கம்யூனிச பாதையை மாற்ற ஆரம்பித்து விட்டது.



சோவியத் யூனியன் போல் நடுவண் அரசு திட்டமிடல் செய்து தேவையான தொழில்களை அரசே தொடங்கி மக்களை அதில் வேலைக்கு அமர்த்தும் முறை கியூபாவில் இருந்தது. நாட்டின் தொழிற்துறையின் முழு கட்டுபாடும் அரசே கட்டு படுத்தியது. உலகில் சுகாதார வசதியில் வளர்ந்த நாடுகளை விட முன்னிலை பெற்றது.அமெரிக்கா கூட அந்த நாட்டிடமிருந்து கற்று கொள்ள வேண்டும் என்று மைக்கேல் மூர் தன்னுடைய சிக்கோ என்ற டாக்குமென்ட்ரியில் கூறி இருப்பார்.சோவியத் வீழ்ச்சிக்கு பின் அதற்கு சோவியத் யூனியனிலிருந்து கிடைத்த உதவிகள் நிறுத்த பட்டன. இரு ஆண்டுக்கு முன் பிடல் கேஸ்ட்ரோவின் சகோதரர் அதிகாரத்து வந்த பின் மாற்றத்திற்கான அறிகுறிகள் தோன்ற தொடங்கின.கடந்த ஏப்ரல் மாதத்தில் முடி வெட்டும் கடைகள் பலவற்றை அரசு தன் கட்டு பாட்டிலிருந்து விளக்கி தொழிலாளர்கள் சேர்ந்து நடத்தும் கூட்டுறவிற்கு கொடுத்தது. விவசாய நிலங்கள் தனியார் வசம் ஒப்படைக்க தொடங்கியது.

கடந்த ஜூலை 26ம் நாள் கியூப புரட்சியின் நினைவு தினத்தில் காஸ்ட்ரோ பேசாத போதே பெரும் மாற்றம் நிகழ போகிறது என்று நினைத்தேன். சில நாட்களுக்கு முன் காஸ்ட்ரோ கியூப கம்யூனிச முறை தோல்வி அடைந்து விட்டதாக கூறி பின்னர் அவ்வாறு கூறவில்லை என்றார். நேற்று கியூப அதிபர் கம்யூனிச மாதிரிக்கு முடிவு கட்டும் வகையில் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன் படி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் அரசு வேலையில் உள்ள 50,000 பேர் பணி நீக்கம் செய்ய படுவார்கள். அவர்கள் வேறு வேலைக்கு செல்ல வேண்டும் அல்லது தொழிலாளிகள் நடத்த போகும் புதிய கூட்டுறவு தொழிற்துறையில் இணைந்து வேலை செய்யவேண்டும். அவர்களுக்கு அரசு தரும் இலவச உணவோ, போக்குவரத்து உதவியோ கிடைக்காது.

ஆனால் கியூபா முழுமையான சந்தை பொருளாதாரத்துக்கோ அல்லது மக்களாட்சிக்கோ போக போவது இல்லை. தற்போதைய செய்தி படி அது அரசு முழுமையாக கட்டு படுத்தும் தனியார் துறை மற்றும் கூட்டுறவு துறையை வெனிசூலாவின் சாவஸ் ஸ்டைலிலும், சீன வழி ஒற்றை கட்சி ஆட்சி முறையும் பின் பற்றபோவதாக தெரிகிறது.

ஆனால் இந்த முடிவு குறுகிய காலத்தில் அவசர அவசரமாக எடுக்க பட்டது அல்ல. கடந்த இரு வருடங்களாக திட்டமிட்டு எடுக்க பட்டது. எனவே வேலை இழக்கும் தொழிலாளர்கள் பாதிக்க படுவது குறைவாகவே இருக்கும்.


முழு சந்தை பொருளாதாரம் எவ்வாறு வசதியற்றவர்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவிகளை மறுக்கிறது என்று அமெரிக்காவின் அனுபவத்தில் பார்க்கிறோம்.வறுமை மிக மிக குறைவாக உள்ள அமெரிக்காவிலேயே இப்படி என்றால் இந்த முறை இந்தியாவில் நடமுறை படுத்த பட்டால்(தற்போது சிறிது சிறிதாக நடை முறை படுத்த பட்டு வருவது வேறு விஷயம்), அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதும் யூகிக்க முடிகிறது. அதே போல் அனைத்து வேலைகளையும் நடுவண் அரசின் மூலம் திட்டமிட்டு அரசே அனைத்து வேலைகளையும் செய்து கொள்வதும் நடைமுறை சாத்தியம் இல்லை என்பதை சோவியத்,(மாவோ கால) சீனா மற்றும் கியுபா போன்றவற்றில் பார்க்கிறோம். இனியும் UTOPIAN கம்யூனிச கொள்கையை கனவாக கொண்டு, கனவை நோக்கியே பயனிப்பதும் பயனில்லாதது.(நிச்சயம் முதலாளித்துவம் தன் நிஜ முகத்தை உலகெங்கும் காட்ட தொடங்கிய பின் அடுத்த cycleல் கம்யூனிசம் மீண்டும் வரும் என்பதும் நிஜம். ஆனால் அதற்காக காத்து கொண்டிருந்தால் தற்போதைய காலத்தில் ஒடுக்க பட்டவர்களை முன்னேற்ற எடுக்க கூடிய, நடைமுறை சாத்தியம் உள்ள வகைகளை பற்றி சிந்திக்க யாரும் இருக்க மாட்டார்கள்)
தற்போதைய சூழ்நிலையில் வசதி வாய்ப்பற்ற மக்களின் வாழ்வாதாரத்தை காக்கவும், அவர்களின் முன்னேற்றத்துக்காகவும் அரசு கல்வி(இலவச கட்டணத்துடன் கூடிய அரசு கல்லூரிகள்), மருத்துவம்( தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளிடம் தாரை வாக்காமல் இலவச அரசு மருத்துவமனை) , முன்னேற்றக்கடன்( அரசு வங்கி மூலம் விவசாயம் மற்றும் சிறு தொழில்) தருவது மற்றும் அடைப்படை வசதிகளை செய்து தருவது போன்றவை இன்றி அமையாதவை.இவற்றை லாப நோக்குள்ள தனியார் வசம் முழுமையாக கொடுக்க முயற்சி செய்வது தவறானது ஆகும்.

அதே போல் தங்கு தடை இல்லாத சந்தை பொருளாதாரம் என்ற பெயரில் மக்களை தனியார் நிறுவங்களின் வேட்டை காடாக்கி அரசின் கட்டுபாட்டை முழுமையாக விளக்குவது என்பதும் மிக தவறாகும்.கட்டுபாடற்ற சந்தை பொருளாதாரம் பற்றி பேசி வந்த அமெரிக்காவே தற்போது அரசின் கட்டுபாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று கூறி அதற்கான செயல்பாட்டிலும் இறங்கி உள்ளது.

தற்போதைய கியூபாவின் இந்த முடிவானது மக்கள் நலம் சார்ந்தது மட்டுமின்றி அனைத்து தொழில்களையும் அரசே எடுத்து நடத்தும் கம்யூனிசத்தின் தோல்வி மட்டும் தான். இதை உதாரணம் காட்டி ஒடுக்க பட்ட மக்களின் அடைப்படை நலனுக்காக அரசு நேரிடையாக மற்றும் மறைமுகமாக செய்து வரும் உதவிகளை முழுதும் நிறுத்த வேண்டும் என்ற கூக்குறல் எழ கூடும்.கூடிய விரைவில் ஊடகங்கிளில், கியூபாவின் இந்த செய்தியை மேற்கோள் காட்டி ஒபாமாவின் மக்கள் நல திட்டங்களை எதிர்த்து நிறைய கட்டுரைகளை காணலாம்.

--

Friday, September 10, 2010

திரைப்படம் - The Yes Men Fix The World (2009)

2004ம் ஆண்டு டிசம்பர் மாதம். போபால் விஷ வாயு விபத்து நடந்து 20ம் ஆண்டு நிறைவடையும் வேலை. விபத்தினால் பாதிக்க பட்ட மக்களுக்கோ போதிய இழப்பீடு கிடைக்க வில்லை. இன்னும் பல்லாயிர கணக்கான மக்கள் தினந்தோறும் பலியாகி கொண்டும், பல வகை நோயினால் பாதிக்க பட்டு கொண்டும் உள்ளனர். விபத்தை உண்டாக்கிய தொழிற்சாலை இன்னும் விஷத்தை நிலத்தடி நீரிலும், மண்ணிலும் கக்கி கொண்டே இருக்கிறது. விபத்தில் பாதிக்க பட்டவர்கள் இழப்பீடுக்காக பல ஆண்டுகளாக போராடி கொண்டே இருந்த நேரம்.

அப்போது BBC தொலைகாட்சியில் DOW Chemicals கம்பெனியின் செய்தி தொடர்பாளர் தோன்றி DOW Chemicals போபால் விஷவாயு விபத்துக்கான பொறுப்பை ஏற்று $12 பில்லியன் பணத்தை விபத்தில் பாதிக்க பட்ட மக்களுக்காக கொடுக்க போகிறது என்றும் அவர்களுக்கு மருத்துவ வசதி மற்றும் தொழிற்சாலையில் மீதமுள்ள விஷ கழிவுகளை அகற்ற ஒப்பு கொண்டதாக அறிவித்த உடன் உலகமே( DOW Chemicals பங்கு வைத்திருப்பவர்கள் தவிர) மகிழ்ச்சியில் ஆரவாரித்தது.




ஆனால் அந்த மகிழ்ச்சி சில மணி நேரங்களுக்கு பின் நீடிக்கவில்லை. பின்னர் தான் தெரிந்தது, அந்த அறிவிப்பை வெளியிட்டவர் DOW Chemicals கம்பெனிக்கு சம்பந்தமில்லாத போலி என்றும் போபால் விஷ வாயு விபத்தையும், அதில் பாதிக்கபட்டவர்களுக்கு இழப்பீடு கிடைக்காததையும்,அந்த தொழிற்சாலையின் இன்றைய நிலையையும் உலக மீடியாவிற்கு வெளிச்சம் போட்டு காட்ட நடத்தபட்ட நாடகம் என்பது.

இதை திட்டமிட்டு நடத்தியவர்கள் Andy Bichlbaum மற்றும் Mike Bonanno. இவர்களுடைய வேலையே இதுபோல் லாப நோக்கை மட்டும் கொண்டு மக்கள் நலம் , அதிலும் ஏழை நாடுகளின் மக்கள் உயிரை கிள்ளு கீரையாக நினைத்து பேரழிவை ஏற்படுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் மற்றும் தடையில்லா சந்தையும், தனி மனிதனின் பேராசையும் தான் உலக முன்னேற்றத்துக்கு வழி என்று நினைத்து மக்கள் நலனில் கவலை படாத அரசாங்கங்களின் நிஜ முகத்தை உலக மக்கள் முன் காட்ட, பெரிய பன்னாட்டு கம்பெனிகள் அல்லது அரசின் பிரதிநிதிகள் என்று பொய்யாக வேடமணிந்து மிக பெரிய மீடியா அல்லது மிக பெரிய தொழிற் கருத்தரங்குகளுக்கு சென்று, உண்மையை நக்கலாக கூறி அதன் மூலம் நிதர்சனத்தை மீடியாவின் மூலம் மகக்ளிடம் கொண்டு செல்வது.இதையே தனது வேலையாக கொண்டு,உலகில் நல்ல மாற்றத்தை கொண்டு வர த்ங்களால் ஆன சிறிய முயற்சியை செய்கின்றனர்.

அவர்கள் நடத்திய திருவிளையாடல்கள் எலலாம் படத்துக்காக எழுத பட்ட கதையல்ல நிஜம்!

போபால் பிபீசி பேட்டி அவர்கள் நடத்திய திருவிளையாடள்களில் ஒன்று. இது போல் அவர்கள் நடத்திய பல நாடகங்களை தொகுத்து படமாக வெளியிட்டுள்ளனர். அந்த படம் தான் The Yes Men Fix the World (2009)

இது தான் அந்த படத்தின் டிரெயிலர்



இதை நடத்த அவர்கள் என்ற DowEthics பொய்யான வலை தளத்தை உருவாக்கி பல காலம் காத்திருந்தனர். அப்போது தான் பிபீசி தொலைகாட்சி நிறுவனம் அவர்களது வலை தளத்தை Dow Chemicals நிறுவனத்தின் உண்மையான வலைதளம் என்று நம்பி, போபால் விபத்தின் 20ஆவது ஆண்டு நிறைவின் போது, அவர்களை பேச அழைத்தது. அது நடந்த விதம் பற்றி தெரிந்து கொள்ள கட்டாயம் இங்கு போய் பாருங்கள்.

அவர்கள் செய்த வேறு சில திருவிளையாடல்கலையும் இந்த படத்தில் காட்டியுள்ளனர். அவற்றில் சில.

லண்டனில் நடந்த மற்றொரு கான்பிரன்ஸில் டௌ நிறுவன அதிகாரி போல் சென்றுள்ளனர். அங்கு டௌ நிறுவனம் புதிதாக கண்டு பிடித்துள்ளதாக கூறி Acceptable Risk Calculator என்ற ஒன்றை அறிமுக படுத்தினர். Acceptable Risk Calculator என்பது ஒரு புதிய பிராஜெக்டை தொடங்கும் போது, அதன் விளைவாக மனித உயிர்கள் பலியாக வாய்ப்பு இருந்தாலும் , லாபம் கொடுக்கும் தொழிலாக இருந்தால் எவ்வாறு ஏற்புடைய ரிஸ்க்கை கணக்கிடுவது என்பது பற்றியது.அதாவது எந்த பகுதியில் அந்த தொழிற்சாலையை கட்டலாம்(ஏழை மற்றும் வளரும் நாடுகளில்), எந்த மக்கள் இறந்தால் கம்பெனிக்கு பாதிப்பு ஏற்படுத்தாது போன்றவை பற்றியது.தங்க முலாம் பூசபட்டை எலும்புகூட்டை அதற்கு குறியாக காட்டி உலக மக்களின் கவனத்தை டௌ மருந்து கம்பெனியின் மீது விழ வைத்தனர்.

கனடாவில் 2007ம் ஆண்டு நடந்த Gas & Oil Exposition 2007 ல் அவர்கள் நடத்திய கூத்து தான் அற்புதமானது. இது எண்ணெய் கம்பெனிகள் சுற்றுபுற சூழல் பற்றி கவலை படாமல் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வதை உலகுக்கு காட்ட செய்த ஏற்பாடு.

Exxon Mobil என்ற மாபெரும் கம்பெனியின் முன்னாள் தலைவர் Lee Raymond, தனது வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின், அமெரிக்க அரசுக்கு பெட்ரோலிய கொள்கை பற்றி ஆலோசனை கூறும் National Petroleum Council என்ற அமைப்பின் தலைவரானார்.அவருக்கு பதிலாக அவரது ஆலோசகராக அந்த கான்பிரன்ஸில் முக்கிய பேச்சாளராக உள் நுழைந்தார் நமது ஹீரோ.NPC செய்து வரும் புதிய ஆராய்ச்சியின் விளைவாக வரும் புதிய கண்டுபிடிப்பை பற்றி அறிவிப்பு வரும் என்று அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து கொண்டிருந்தார்கள்

மக்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் புதிய வகை எண்ணெய் விவீலியம் கண்டு பிடிக்க பட்டதாக அறிவித்தார். அது எதிலிருந்து எடுக்க பட்டது தெரியுமா? உலகில் மிக எளிதாக, மலிவாக கிடைக்கும் பொருளான மனித உடல் பகுதியிலிருந்து எடுக்கபட்டது. புவி வெப்பமாவதால் வருடந்தோறும் ஏழை நாடுகளில் பல்லாயிய கணக்கான மக்கள் சாவதால்,சாவிலிருந்தும் பணம் பண்ணுவதுதான் முதலாளித்துவத்தின் குறிக்கோள் என்று கூறி, அந்த உடலிலிருந்து எண்ணெய் எடுக்கும் புதிய தொழில் நுட்பத்தை உலகுக்கு காட்டி உலகெங்கிலும் அதிர்வலை ஏற்படுத்தினார். எக்சான் மொபில் கம்பெனியின் கழிவுகளை அகற்றி நோய் வந்து இறந்த தொழிலாளியின் உடல் பாகத்திலிருந்து மெழுகு வர்த்தியை தயாரித்து அதை அனைவரையும் ஏற்ற வைத்தார்.

காட்ரீனா புயலுக்கு பின் அங்கு வாழ்ந்த ஏழை மக்களின் வீடுகளை அபகரித்து ஏழைகளுக்கு அரசு கட்டி தரும் திட்டத்தை ஒழித்து பண முதலைகளை உள் கொண்டுவரும் அரசின் முயற்சியையும், நியூ ஆர்லியன்ஸ் மறுவாழ்வு என்ற பெயரில் மக்களின் பயன்பாட்டிற்கு நடக்கும் கண்காட்சிகளில் நடக்கும் கூத்தினை அவர்கள் வெளி கொண்ட விதம் பற்றியும் ,அவர்களாகவே வெளியிட்ட Newyork Times பத்திரிக்கை பிரதி பற்றியும் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த படத்தின் ( உண்மையிலேய தான் நடத்திய திருவிளையாடல்கள்) மூலம் சந்தையில் அரசின் தலையீட்டின் அவசியத்தை அழகாக மக்கள் மனத்தில் பதிய வைத்திருக்கிறார்கள்.இந்த படம் சந்தை பொருளாதாரம் ஏற்படுத்தும் விளைவுகளை மிக நகைச்சுவையான முறையில் அழகாக எடுத்து காட்டுகிறது. விழிப்புணர்ச்சிக்கு இல்லை என்றாலும் கூட ஒரு நல்ல நகைச்சுவை படமாகவாவது கட்டயம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.


இந்த படத்தின் நாயகர்கள் தற்போதும் Yes Lab என்ற பெயரில் லேப் நடத்தி வருகிறார்கள். மகக்ளை பலிகடா ஆக்கும் பன்னாட்டு/ அரசு நிறுவங்களின் தோலுரித்து காட்ட நினைக்கும் தன்னார்வ நிறுவனக்கள், இந்த லேபை அனுகினால் அவர்கள் நல்ல ஐடியா கொடுப்பதுடன் அதை நடத்தி முடிக்க திட்டமிட்டு, அது முழுதும் கூட இருந்து நடத்தி முடிப்பார்கள். சமுதார நலனுக்காக அவர்கள் நடத்தும் நாடகத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அவர்களை தொடர்பு கொண்டால், நீங்கள் இருக்கும் இடத்தின் அருகாமையில் அவர்கள் எதாவது நாடகம் நடத்தினால் உங்களை பயன் படுத்தி கொள்வார்கள்.

பின் குறிப்பு: முதலாளிகளை எதிர்த்து இந்தியாவில் இது போல் செய்தால், அதில் கலந்து கொள்பவர்களின் நிலை என்னவாகும் என்பது அவர்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன்.

--

--

Monday, September 06, 2010

கிழக்கிந்திய கம்பெனி 6 - இங்கிலாந்தில் கி.இ.கம்பெனி



கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை சுரண்டிய கதை 1

கிழக்கிந்திய கம்பெனி 2 - ஆரம்ப காலம்

கிழக்கிந்திய கம்பெனி 3 - தேயிலை அரசியல்

கிழக்கிந்திய கம்பெனி 4 - இந்தியாவின் நெசவு தொழில் - வளர்ச்சியும் வீழ்ச்சியும்

கிழக்கிந்திய கம்பெனி 5 - கொள்ளை போன செல்வங்கள்



இது வரை இந்தியாவில் கிழக்கு இந்திய கம்பெனியின் செயல்பாடுகளை பற்றி பார்த்தோம். இப்பதிவில் இங்கிலாந்தில் கி.இ.கம்பெனியின் செயல்பாடுகளை பற்றி பார்ப்போம்.

கி.இ.கம்பெனி என்பது வியாபாரிகள், வங்கி முதலாளிகள், அதிகார இடைதரகர்கள் மற்றும் ஒரு சில பணகாரர்களின் கூட்டணியால் ஆரம்பிக்க பட்டது. தற்போதுள்ள பன்னாட்டு கம்பெனியினரை போலவே அதுவும் லஞ்சங்களை இங்கிலாந்தில் உள்ள அரசியல்வாதிகளுக்கு வாரி வழங்குவதில் கில்லாடிகள். இந்நிறுவனம் ஆரம்பிக்க பட்ட சில வருடங்களுக்கு பிறகு(1693) அது கணக்கில் காட்டி அரசியல்வாதிகளுக்கு அன்பளிப்பாக(!) கொடுத்த பணம் 100000 பவுண்டை தாண்டியது, இந்த பணத்தின் மதிப்பு அந்த காலத்தில் மிக அதிகமானது.

ஆரம்ப காலத்தில் கம்பெனியின் வருமானம் இந்தியாவிலிருந்து நடை பெற்ற வர்த்தகம் மூலம் தான் கிடைத்தது. இங்கிலாந்து அரசு கிழக்கிந்திய தீவுகளுக்கான வர்த்தகத்துக்கு
கி.இ.கம்பெனிக்கு ஏகபோக உரிமையை கொடுத்து இருந்தனர். இது தான் கம்பெனியின் லாபத்துக்கான துருப்பு சீட்டு. இந்த ஏக போக உரிமையை நிலை நிறுத்தி கொள்ள அரசியல்வாதிகளுக்கு பெருமலவில் லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது. அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் மட்டுமல்ல. இங்கிலாந்து மத்திய வங்கிக்கு பெருமளவில் கடனும் கொடுத்து வந்தது. இங்கிலாந்து அரசு நடத்தும் போர்களுக்கும் இங்கிலாந்து மத்திய வங்கி பணம் கொடுக்கும், அந்த பணத்தின் ஒரு பகுதி கி.இ.கம்பெனி கொடுத்து வந்தது.

கி.இ.கம்பெனியின் வளர்ச்சியால் அதில் பங்கு தாரர்களாக இருந்த பல பேர் பெரும் பணக்காரர்களாக மாறினர். இது அப்போது பரம்பரை பணக்காரர்களாக இருந்த ஒரு சில செல்வந்தர்களுக்கு பிடிக்க வில்லை. அது மட்டுமன்றி இங்கிலாந்தில் இருந்த நெசவு தொழில் லாபியும் கி.இ.கபெனிக்கு எதிரியாக இருந்தது. இவர்களின் வற்புறுத்தலால் இங்கிலாந்து அரசு கி.இ.கம்பெனியின் ஏக போக உரிமையை உடைக்க 1698 ல் புதிய கம்பெனியை தொடங்கியது. தற்போதைய பன்னாட்டு கம்பெனியினரை போன்றே வலுவான நிதி நிலையில் இருந்த கி.இ.கம்பெனியின் உரிமையாளர்கள் புதிய கம்பெனியின் பங்குகளை வாங்கி தள்ளினர். அந்த கம்பெனிக்கு பெரும் நெருக்கடி கொடுத்தனர். இருந்தாலும் அந்த புதிய கம்பெனி கி.இ.கம்பெனியுடன் போட்டி போட்டு சில காலம் இருந்தது. மீண்டும் பெரிய அளவு மறைமுக வேலைகளில் இறங்கிய கி.இ.கம்பெனியினர், இங்கிலாந்து அரசிடம் 3200000 பவுண்டுகள் கொடுத்து புதிய கம்பெனியை தன்னுடன் இணைத்து கொண்டனர். மேற் சொன்ன பணம் 3 ஆண்டுகளுக்கு கிழக்கிந்திய தீவுகளில் ஏக போக உரிமையுடன் வியாபாரம் செய்ய பொருந்தும். அதற்கப்புறம் ஒவ்வொரு ஆண்டும் பெருந்தொகையை அரசுக்கு கொடுத்து கொண்டே இருக்க வேண்டும்.

தற்போதைய பங்கு வர்த்தகம் போலவே அப்போதும் இருந்தது. கி.இ.கம்பெனியினர் ஒவ்வொரு முறை போரில் வெற்றி பெரும் போதும் இங்கிலாந்தில் அதன் பங்கின் மதிப்பு பெருமளவு உயரும். உதாரனமாக பிரான்சை வென்ற போது அதன் மதிப்பு 263 பவுண்டை தொட்டது. அது கொடுத்த டிவிடெண்ட் மதிப்பும் 12.5 சதவிதத்தை தாண்டியது. வங்காளத்தை வென்றவுடன் அதன் மதிப்பு இன்னும் கூடியது.ஒரு புறம் இந்தியாவில் இந்திய மக்களின் ரத்தத்தை உறிஞ்சி தன் லாபத்தை அதிக படுத்தியது. மறுபுறம் இங்கிலாந்தில் தன் பங்கின் மதிப்பு விடு விடுவென வேகமாக உயர்ந்தது.

கம்பெனியின் லாபம் அதிகமானவுடன் கம்பெனியின் உரிமையாளர்கள் அரசியலில் ஈடுபட்டு 1780ல் சுமார் 10 சதவித இங்கிலாந்து பாரளுமன்ற உறுப்பினர்கள் கம்பெனி சார்ந்தவர்களாக
இருந்தனர்.கி.இ.கம்பெனியின் அதிகார வளர்ச்சி போலவே அதன் எதிரிகளின் வளர்ச்சியும் இருந்து. கி.இ.கம்பெனி லாபியை உடைக்க பல பேர் பல காலம் கடுமையாக போராடினர். 1780களில் கி.இ.கம்பெனியின் உரிமையை பார்லிமெண்ட் அமைக்கும் கமிட்டியிடம் கொண்டு வர முயன்று வெற்றி பெறும் நிலையில் இருந்த போது கி.இ.கம்பெனிக்கு அதிகார வர்க்கத்திடம் இருந்த சக்தி மூலம் ஆட்சியையே கலைத்து விட்டனர்.

ஆனால் கி.இ.கம்பெனியின் மீதான எதிர்ப்பு மேன் மேலும் அதற்கு பின்னர் அதிகமானது.1813ம் ஆண்டு கொண்டு வரபட்ட புதிய சட்டம் மூலம் இந்திய நாட்டை ஆளும் தலைமை பொறுப்பு இங்கிலாந்து மன்னரிடம் கொடுக்கபட்டது. இந்தியாவிற்கு இடையேயான வியாபார ஏக போக உரிமையும் பறிக்க பட்டது. 1833ம் ஆண்டு முதல் அதன் வியாபர உரிமையும் ரத்து செய்யபட்டது, இங்கிலாந்து மன்னரின் பிரதிநிதியாக இந்தியாவை ஆளும் பொறுப்பு மட்டும் கொடுக்க பட்டது. முதல் இந்திய சுதந்திர போருக்கு பின் இங்கிலாந்து அரசின் நேரடி கட்டுபாட்டுக்குள் இந்தியா வந்தது.

சஞ்சீவ் மேத்தா என்ற இங்கிலாந்து வாழ் இந்தியர் தற்போது கி.இ.கம்பெனியை வாங்கி உள்ளார்.

கி.இ.கம்பெனிக்கும் இந்தியாவிற்குமான உறவில் முக்கியமாக பார்க்க வேண்டிய விஷயங்கள் சில .

1. மதவாதிகளுக்கும் அதற்கும் உள்ள உறவு. அந்த காலத்தில் போர்ச்சுகீசியர்கள் போன்ற ஐரோப்பியர்கள் தாங்கள் சென்ற காலனி நாடுகளில் எல்லாம் தங்களுடைய மதத்தை(கிறித்துவம்), முக்கியமாக தங்கள் மதத்தின் பிரிவை பின் பற்றாத வேற்று மதம் மற்றும் தன் மதத்தின் வேற்று பிரிவை சார்ந்த மக்களை கூட்டம் கூட்டமாக எரித்து (inquisition) கொன்ற காலம் அது. ஆனால் கி.இ.கம்பெனியோ தங்கள் ஆதிக்கம் செலுத்திய பகுதிகளில் கிறித்துவ மிஷினரிகளின் செயல்பாட்டுக்கு தடை விதித்திருந்தது. இது உண்மையிலேயே நம்ப முடியாத அதிசயம்.ஏனென்றால் அப்போது மத்தத்திற்கும் அதிகாரத்திற்கும் இடையேயான உறவு மிக நெருக்கமானது. ஆனால் மக்களிடையே தங்கள் மதத்தை புகுத்துவதால் மத ரீதியான பிணக்கு அதிகரிக்கும் என்று மிஷனரிகளை அனுமதிக்கவில்லை. ஆனால் வியாபாரிகள் போர்வையில் மத போதகர்கள் இங்கு வந்திருந்ததும், கி.இ.கம்பெனியில் மத நம்பிக்கை அதிகம் கொண்டிருந்த அதிகாரிகள் அவர்களை அனுமதித்ததும் உண்மை. 1813 ல் இங்கிலாந்து அரசு கட்டயமாக மிஷனரிகளை அனுமதிக்க ஆணை பிறப்பித்தது. அதன் பின் புற்றீசல் போல் வந்த மிஷனரிகளின் வருகையும், அவர்களின் செயல்பாடும் 1857ல் முதல் இந்திய சுதந்திர போர் நடை பெற ஒரு காரணியாக ஆயிற்று.ஆனால் அதற்கு பின் கிறித்தவ மிஷனரிகள் இந்தியாவின் கல்வி மற்றும் மருத்துவ வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கு அளவிட முடியாது என்பதும் குறிப்பிட தக்கது.

2. கி.இ.கம்பெனியின் கால கட்டத்தில் இங்கிலாந்தின் மேற்கேயும் இது போலவே வியாபரம் நடந்தது. ஆனால் அங்கு வியாபாரம் நடத்தியவர்களின் முக்கிய குறிக்கோள் மக்களை அடிமைகளாக பிடித்து விற்று லாபம் சம்பாதிப்பது. ஆனால் கி.இ.கம்பெனியோ அது போன்ற அடிமை வியாபாரத்தை இந்தியாவில் செய்ய்வில்லை(வேறு சில தீவுகளில் செய்தது உண்மை).

3. கி.இ.கம்பெனி தன் லாபத்துக்காக இங்கிலாந்து நெசவு தொழிலாளிகளின் எதிர்ப்பையும் மீறி இந்திய துணிகளை பெருமளவு ஏற்றுமதி செய்தது. இதனால் இந்திய தொழில் துறையும் ஆரம்ப காலங்களில் பெருமளவு விரிவடைந்தது

கி.இ.கம்பெனியின் செயல்பாட்டிற்கும் தற்போதைய பன்னாட்டு கம்பெனிகளின் செயல்பாட்டிற்கும் இடையே உள்ள ஒற்றுமை என்ன என்று யோசிப்பதை இந்த பதிவை படிக்கும் உங்களிடமே விட்டு விடுகிறேன்.

--