Tuesday, April 27, 2010

இந்திய வைர ஏற்றுமதி தொழிலுக்கு ஆப்பு வைக்கும் சீனா?


பட்டை தீட்டிய வைர ஏற்றுமதி மூலம் இந்தியாவிற்கு $17 பில்லியன் டாலருக்கும் மேல் ஏற்றுமதி வருவாய் கிடைக்கிறது. இதன் மூலம் மகாராஷ்ட்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் லட்ச கணக்கானவர்கள் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். இத்தொழிலில் உலகலவில் முதலிடத்தில் இருப்பது இந்தியா. இப்போது இந்தியாவில் இத்தொழிலுக்கான ஆப்பு வைக்க சீனா தயாராகி விட்டது. எப்படி என்கிறீர்களா? வைரம் தாது பொருளாக பெரிய அளவில் அங்கோலா காங்கோ போன்ற ஆப்ரிக்க நாடுகளில் கிடைக்கிறது. இந்த வைர தாது இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய பட்டு அது இந்தியாவில் பட்டை தீட்ட பட்டு, ஆபரணமாக செய்ய பட்டு பெல்ஜியத்திற்கு ஏற்றுமதி செய்ய பட்டு உலகம் முழுதும் விற்பனை செய்ய படுகிறது.

சீனா தற்பதோது காங்கோ அங்கோலா போன்ற நாடுகளுக்கு பெருமளவு நிதி உதவி செய்து அங்கு உற்பத்தியாகும் வைரத்தின் பெரும் பகுதியை சீனாவிற்கு ஏற்ருமதி செய்ய நிர்பந்திப்பதாக கூற படுகிறது. அப்படி நடக்கும் பட்சத்தில் மூல பொருள் இல்லாமல் வைரம் பட்டை தீட்டும் தொழில் இந்தியாவில் நலிவடைய தொடங்கும்.

ஆனால் ஒரு சில நிபுணர்களின் கருத்து படி டிபியர்ஸ் மற்றும் அல்ரோசா என்ற இரு கம்பெனிகள் தான் உலக வைர விற்பனையில் பெரும் பங்கு வகிக்கின்றனர். எனவே இவ்விரு கம்பெனிகளும் முடிவு செய்து ஒத்துழைத்தால் தான் சீனாவால் வைர பட்டை தீட்டும் தொழிலில் ஆதிக்கம் செலுத்த முடியும். இந்திய் அரசு வழக்கம் போல் இதை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ள போவது இல்லை.

--

Sunday, April 18, 2010

நக்சலைட் இயக்கத்தை அழிக்க ஒர் நூதனமான அணுகுமுறை!

அமைதியாக நடக்கும் ஒரு சமுதாய புரட்சி - 1

அமைதியாக நடக்கும் ஒரு சமுதாய புரட்சி - 2

தேசிய வேளாண் நிறுவனம் பற்றியும் அது விவசாயம் சார்பாக செய்து வரும் பணிகளை முந்தைய பதிவுகளில் பார்த்தோம். அது செய்து வரும் சமூக பணிகளை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

1.காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 300க்கும் அதிகமான சுய உதவி குழுக்களை அமைத்துள்ளனர். ஆனால் பெயரளவிற்கு குழுவாக மட்டும் விட்டு விடாமல், அவர்களுக்கு தேவையான தொழில் நுட்ப பயிர்ச்சிகளை அளித்து, கடனுதவி பெற உதவி செய்து,தொடர்ச்சியாக தொழில் நுட்ப ஆலோசனை செய்து அவர்களின் குழுக்கள் தொடர்ச்சியாக வெற்றிகரமாக நடைபெற உதவி செய்கிறது. அது மட்டுமில்லாமல் அவர்களின் உற்பத்தியை சந்தை படுத்தவும் உதவி செய்கிறது.

2. சுகாதாரம் பற்றி கிராம மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்திய அளவில் சிறந்த சுகாதார கிராமமாக அது கவனித்து கொள்ளும் கிராமத்திற்கு பெயர் வாங்கி கொடுத்துள்ளது.

3.சமீப காலமாக சென்னையில் ஏற்றுமதிக்கென்று பல தொழில் நிறுவனங்கள் தொழிற் சாலையை தொடங்கி உள்ளது. அவற்றில் மனித வளத்தை மட்டும் அதிகம் சார்ந்துள்ள தைத்த துணிகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களும்(export garments) பல. அவற்றிற்கு வேலை பார்க்க வரும் தொழிலாளர்களுக்கு சம்பளமோ குறைவு. பெரும்பான்மையான தொழிலளர்கள் கிராமத்திலிருந்து சென்னை வந்து வேலை செய்பவர்களாக இருப்பார்கள். சென்னையில் அவர்கள் தங்கி இருந்து வாழ்க்கை நடத்துவ்து மிகவும் கடினம்.மறுபுறம் கம்பெனிகளுக்கு வேலைக்கு ஆள் கிடைப்பதும் கடினம்.இந்த கம்பெனிகளையே கிராம சூழ்நிலையில் ஏற்படுத்தினால் எப்படி இருக்கும்?. வேலை செய்பவர்களும் தங்கள் வீட்டிலிருந்து வேலைக்கு எளிதாக செல்லலாம் . அவர்களுக்கு சேமிப்பும் அதிகமாக இருக்கும். தேசிய வேளாண் நிறுவனத்தின் முயற்சியால் இது போன்ற ஒரு கார்மெண்ட்ஸ் கம்பெனியை மதுராந்தகத்தை அடுத்த சூனாம்பேடு என்ற கிராமத்தில் தொடங்கி வைத்துள்ளது.கிராமத்தில் உள்ள பெண்களுக்கு தேசிய வேளாண் நிறுவனம் தையல் பயிற்சி கொடுத்து அவர்களுக்கு வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி கொடுக்கிறது.

4.M.V. Diabetics நிறுவனத்தின் உதவியுடன் கிராம மக்களுக்கு சர்க்கரை வியாதி உள்ளதா என்று மொபைல் அராய்ச்சி கூடம் மூலம் கிராமங்களுக்கே சென்று பரிசோதனை செய்து சாட்டிலைட் மூலம் புகழ் வாய்ந்த மருத்துவ நிபுனர்களின் ஆலோசனையை கிராமத்திலிருந்தபடியே கிடைக்க செய்கிறது.

5.நகரத்தில் உள்ள குழந்தைகளுக்கு தரம் வாய்ந்த மழலையர் பள்ளிகள் உள்ளது. கிராமத்தில் கூலி வேலை செய்யும் ஏழை தொழிளாலர்களுக்கு தேசிய வேளாண் நிறுவனம் தரம் வாய்ந்த மழலையர் பள்ளியை நடத்தி வருகிறது.




6.கிராம பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு கம்ப்யூட்டர் பயிர்ச்சியை கொடுக்கிறது.

7.IGNOUவுடன் இணைந்து விவசாயம் சார்ந்த பட்டய படிப்புகளை கற்று கொடுக்கிறது.இதன் மூலம் கிராமங்களில் இருக்கும், பள்ளி படிப்பை பாதியில் முடித்த இளைஞர்களுக்கு விவசாய தொழில் நுட்பத்தில் பயிற்சி அளித்து அதன் மூலம் அவர்களுக்கு விவசாயம் சார்ந்த கம்பெனிகளில் வேலை கிடைக்கவும் வழி செய்கிறது. பட்டய படிப்பை படித்து வேலைக்கு செல்ல விரும்பாதவர்களுக்கு விவசாயம் சார்ந்த தொழில்களை தொடங்க ஆலோசனை தருகிறது.


8.விவசாய பட்டதாரிகள் சுய தொழில் தொடங்க நபார்டு வங்கியிடம் கடன் வாங்க தேவையான(Agri Clinic வைக்க) பயிர்ச்சியையும் தருகிறது.

9.நகரில் வளரும் குழந்தைகளுக்கு விவசாயம் பற்றி எதுவுமே தெரிவதில்லை. என்வே சென்னை போன்ற மாநகரங்களில் படிக்கும் குழந்தைகளுக்கு விவசாயம் பற்றி அறிமுகம் கொடுக்க கிராமத்துக்கு ஒரு நாள் சுற்றுல்லா வர வழி வகை செய்து கிராம புற விளையாட்டுகளை காட்டுவதுடன் விவசாயத்தில் அறிமுக பாடமும் நடத்துகிறது.

10.கம்பெனிகளில் வேலை செய்பவர்களுக்கு team outing யை கிராமபுறங்களில் ஏற்பாட்டு செய்து eco tourism வளர வழிவகை செய்கிறது. இந்த team outingல் கிராமபுற விளையாட்டு நடத்துவது, மாட்டு வண்டி சவாரி,நாட்டு புற கலைகள் என்று மிகவும் வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்தி கொடுக்கிறது.

இந்த தலைப்புக்கும் கட்டுரைக்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கிறீர்களா?

இது போன்ற நிறுவனங்கள் நாடு முழுதும் தோன்றினால் கிராம- நகர ஏற்ற தாழ்வு குறைந்து நக்சலைட் போன்ற இயக்கங்கள் நாட்டில் வளர்வதற்கான சூழ்நிலையை அழிக்கும்.

--

Saturday, April 17, 2010

Goldman Sachன் தந்திரம்


அமெரிக்க நிதி நெருக்கடி காலங்களில் மிக பெரிய வங்கிகள் எவ்வாறு சம்பதித்தனர் என்று பல விதமாக செய்திகள் வெளி வந்தாலும் தற்போது SEC(Security and Exchange Commission)0 கோல்ட்மேன் சாக்ஸ் மீது அறிவித்துள்ள குற்றச்சாட்டு இது போன்ற பெரும் நிதி நிறுவனக்களின் நம்பகத்தன்மையே சந்தேகத்தில் ஆழ்த்த தொடங்கி உள்ளது.
அப்படி என்னத்தான் SEC குற்றசாட்டு சொல்கிறது என்று பார்ப்போம். நிதி நெருக்கடிக்கு முன் அமெரிக்க ரியல் எஸ்டேட் கடன் மார்க்கெட் வேகமாக வளர்ந்து வந்தது அனைவரும் அறிந்ததே. அப்போது முதலீட்டார்கள் அனைவரும் நம்பியது அமெரிக்க ரியல் எஸ்டேட் வளர்ச்சி இப்போதைக்கு குறையாது என்பதே. அதனால் வங்கிகள் கொடுத்த கடனின் அபாயத்திலிருந்து(default) தங்களை காத்து கொள்ள, பல கடன்களை ஒரு கலவையாக்கி அவற்றை ஒரு பொருளாதார பொருளாக(financial product) விற்க தொடங்கின. ஒவ்வொரு CDOவிலும் இருக்கும் கடன் பத்திரங்களின் நம்பக தன்மையை தனி தனியே ஆராய்வது கடினம். அதற்கு தர நிர்ணய படுத்தும் அமைப்புகள் (Credit rating Agencies), அதன் தரத்தை ஆராய்ந்து அவற்றிற்கு மதிப்பீடுகளை வழங்கும். (CDO வை உருவாக்கும் நிறுவனங்கள் தான் பணம் கொடுத்து தன்னுடைய CDOவின் தரத்தை பதிப்பீடு செய்ய சொல்லும். அப்படி என்றால் தரம் நிர்ணயம் செய்பவர்களின் மனபாங்கு எப்படி இருக்கும் என்பதை நீங்களே யூகித்து கொள்ளுங்கள்!).2006ம் ஆண்டு ABX என்ற குறியீட்டு முறை அறிமுக படுத்தபட்டது. அதன் படி CDO போன்ற பொருளாதார பொருட்களின் மதிப்பு உயரும் அல்லது குறையும் என்று பெட் செய்ய முடியும். முதலீட்டளர்களின் நட்டத்தின் அளவை மோசமான கால்ங்களில் குறைக்கவே இம்முறை உதவும்.ஆனால் கோல்ட்மேன் சாக்ஸ் இந்த முறையை தந்திரமாக உபயோக படுத்தி முதலீட்டளர்களை நட்டத்திற்கு தள்ளி தான் பெரும் லாபம் அடைந்ததாக் குற்றசாட்டு எழுப்ப பட்டுள்ளது.
2006 ல் அமெரிக்க ரியல் எஸ்டேட் மார்கெட் மிகவேகமாக வளரும் என்று நம்பிய போது அது கூடிய சீக்கிரம் விழ போகிறது என்ற உண்மை ஒரு சிலருக்கு தெரிய ஆரம்பித்தது.அதை உணர்ந்த ஒரு சில கோல்ட்மேன் நிறுவன விற்பனையாளர்கள்,மேற் சொன்ன CDO சிலவற்றை உருவாக்கினார்கள்.அவற்றிற்கு நல்ல மதிப்பீடு பெற்று தர மோடி போன்ற தர நிர்ணய அமைப்புகளிடம் நெருக்குதல் கொடுத்தார்கள் என்று கூற படுகிறது. அவற்றிற்கு நல்ல மதிப்பீடு பெற்றவுடன் நடந்தது தான் கோல்ட்மேன் நிறுவனத்தின் நம்பகதன்மையை கேள்வி குரியாக்கி உள்ளது. இந்த CDOகளை உருவாக்கும் போதே அது நிச்ச்யம் தேறாது என்று அவர்களுக்கு தெரிந்துள்ளது. ஆனால் கோல்ட்மேன் நிறுவனம் அதை வெளியுட்டள்ளதால் அதன் வாடிக்கையாளர்கள் அது தரம் வாய்ந்தது என்று நம்பி அது சார்ந்த முதலீடுகளில் ஈடுபட்டனர். ஆனால் மறுபுறம் கோல்ட்மேன் நிறுவனமோ அந்த CDOக்கள் நம்பக தன்மை குறைந்தது என்று மிக பெரிய அளவுக்கு பெட் செய்தது. அவர்களுக்கு தான் அதன் தரம் தெரியுமே. ஆனால் தன் வாடிக்கையளர்களிடம் அந்த CDOஅதிக மதிப்புடையதாகபொய்யாக காட்டியது.18 மாதங்களில் CDOல் உள்ள கடன்களை உண்மையில் வாங்கியவர்கள் கட்டாமல் மஞ்சள் நோட்டீசு விட்ட்தால் அதன் தர மதிப்பீடும், மதிப்பும் மிக வேகமாக வீழ்ந்தது. அதன் மதிப்பு வீழும் என்று பெட் கட்டிய கோல்ட்மேனுக்கு பில்லியன் டாலருக்கும் மேல் லாபம். அதை நம்பிய வாடிக்கையளர்களுக்கோ பட்டை நாமம்!

--

Wednesday, April 14, 2010

பள்ளி மேம்பாட்டிற்கு $10 ல் ஓர் புரட்சி


வெளி நாடுகளில் தமிழர்கள் பொது இடத்தில் கூடி பேசும் போது தவறாமல் விவாதிக்க படும் விஷயம் தாயகத்தில் நடக்கும் லஞ்சம் ஊழல் பற்றிய பேச்சாக இருந்தாலும்
தமிழ் நாட்டின் ஆக்க பூர்வமான வளர்ச்சிக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற விவாதமும் சில சமயங்களில் இருக்கும்.ஆனால் பெரும் பாலான நேரம் அது பேச்சோடே முடிந்து விடும்.
தாய் நாட்டு வளர்ச்சிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் அதை எப்படி செய்ய முடியும் என்ற மலைப்போடு மறந்து விடுவோம். இந்தியாவில் இருக்கும் ஒரு சில
சேவை நிறுவனங்களுக்கு பண உதவி செய்ய முடிந்தாலும் அது எந்த அளவு வளர்ச்சிப்பணியை அடையும் என்ற கேள்விக்குறி தான் முன் நிற்கும்.
.தனியே நாமே எதாவது உருப்படியாக செய்யலாம் என்றால் மிக பெரிய தொகை செலவாகுமே என்ற மலைப்பு ஏற்படும். என்வே இது போன்ற சிந்தனைகள் பேச்சோடு முடிந்து விடும்.
10 வருடங்களுக்கு முன் இதே போன்ற விஷயம் ஒரு குழுவினரிடம் விவாதிக்க பட்டது. ஆனால் அது பேச்சோடு நிற்காமல் ஒரு திட்டமாக தீட்டப்பட்டு
இன்று வரை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதோடு மிக வேகமாக வளர்ச்சி அடையவும் செய்கிறது.

அது என்ன முயற்சி என்று அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதா?இந்தியாவில் கல்வி வளர்ச்சி மிக வேகமாக இருந்தாலும் கிராமப்புற மற்றும் நகர்புற பள்ளிகளில் உள் கட்டமைப்பின்
நிலை மிக மோசமாகவே உள்ளது.பெரும்பாலான பள்ளிகளுக்கு கட்டிடம் சரியாக இல்லை. உட்கார மேஜை வசதி சரியாக இருக்காது.மேலும் பிற வசதிகளும் ஒழுங்காக இருக்காது.
கி.பி 2000 ஆண்டில் ஏப்ரல் மாதம் ஏழைப்பள்ளிகளின் வளர்ச்சி பற்றி ஒரு சிலரிடையே விவாதிக்கப்பட்டு பின் தொலை பேசியிலும் மின்னஞ்சலிலும் விவாதத்தில் வளர்ந்து விதையாக வித்திடப் பட்டது தான்
TEAM(TEAM for Educational Activities in Motherland)(http://www.IndiaTEAM.org)
என்ற அமைப்பு..மிகப்பெரிய தொகையை தாயகக்கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்குவது என்பது நடைமுறையில் கடினம். எனவே இத்திட்டதின் படி ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு குறுந்தொகையை
,அதாவது $10 ஒவ்வொரு மாதமும் குழுவிடம் செலுத்துவார்கள். உதாரணமாக 100 பேர் மூன்று மாதம் $10 கொடுத்தால் ,அது $3000 டாலராக பெருகும். குலுக்கல் முறையில்
6 பேரை தேர்ந்தெடுத்து ஆளுக்கு $500 டாலர் பிரித்து கொடுக்க படும். தேர்ந்தெடுக்கப்பட்ட 6 பேரும் இந்தியாவில் உள்ள ஏழைப்பள்ளிகளை தேர்ந்தெடுத்து $500 டாலருக்குண்டான
பள்ளி உட்கட்டமைப்புக்கான பணிகளை மேற்கொள்ளுவார்கள். பணிகள் செவ்வனே முடிந்த பின், ரசீது மற்றும் புகைப்படங்களை அமைப்பிடம் சமர்பிப்பர். 50 மாதங்களில்
ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு பள்ளியையாவது மேம்படுத்தி இருப்பார்கள்.

இதை படிக்கும் போது ஒருவர் மாதம் $10 டாலர் கொடுப்பதால் என்ன பெரிய மாற்றம் நிகழ்ந்துவிட போகிறது என்று தோன்றும். ஆனால் கடந்த பத்தாண்டுகளில் இவ்வமைப்பினர்
தாயகக்கல்வி வளர்ச்சிக்காக செய்த மொத்த தொகை அரை மில்லியன் டாலரையும் தாண்டி விட்டது .ஆச்சரியமாக இருக்கிறதா? தமிழ் நாட்டுப்பள்ளிகளுக்கு இவ்வமைப்பினரால் செய்ய பட்ட உதவிகளை
காண இந்தச் சுட்டியை
(http://www.indiateam.org/projects/Pub_PrjList.php?state=TamilNadu) அழுத்திப்பாருங்கள்.
.இந்த அமைப்பின் மூலம் பயனடைந்ததில் தமிழகப்பள்ளிகள் முதலிடம் வகிக்கிறது. நூற்றுக்கணக்கான பள்ளிகளுக்கு இந்த அமைப்பின் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்
அமர மேஜை, கட்டிடங்கள் மற்றும் பிற அடிப்படை தேவைகள் நிறைவேறியுள்ளன.\\
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் இந்த அமைப்பின் மூலம் பயன் பெற்றுள்ள பள்ளிகளை இங்கு

(http://www.indiateam.org/projects/Pub_PrjList.php?state=All)காணலாம்.(இந்த சுட்டியில் 6 பக்கங்கள் உள்ளது.கவனம்).இந்த அமைப்பின் உறுப்பினர்களால் தற்போது செயல்
படுத்த பட்டு வரும் பணிகளை காண இங்கு
http://www.indiateam.org/projects/Pub_qCurrent_PrjList.php சுட்டுங்கள்

இந்த அமைப்பின் சிறப்பம்சமே இந்த அமைப்பு நிறைவேற்றும் பணிகள் யாவும் யாரோ ஒரு தெரியாதவர்கள் மூலம் நடை பெறாமல் இந்த அமைப்பில் உள்ளவர்கள் மூலம் செயல்படுத்துவது தான்.
இந்த அணுகுமுறையே இந்த அமைப்பிற்கும் அதன் செயல் பாட்டிற்குமான வெற்றியை ஈட்டிக்கொடுத்து வருகிறது என்று கூறலாம்.

இதைப்படிக்கும் வெளி நாடு வாழ் இந்தியர்கள் அனைவரும் தமிழக பள்ளிகளின் உள் கட்டமைப்பை மேம்படுத்துவதை ஒரு சமுதாயக்கடமையாக ஏற்று கொண்டு இவ்வமைப்பில்
தங்களையும் ஈடுபடுத்தி சேவை மனப்பன்மையோடு பணி செய்தால் தாய் நாட்டின் கல்வி வளர்ச்சியில் ஒரு புரட்சியே ஏற்படுத்த முடியும்..இதை படிக்கும் உங்களுக்கும்
இது போன்ற சமூகப்பணியை ஆற்ற ஆர்வமாக இருந்தால் info@indiateam.org என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.


--

Sunday, April 04, 2010

அமெரிக்காவின் வளர்ச்சி மற்றும் வெளி நாட்டவரின் பங்கு

நியுயார்க் டைம்ஸ்ல் தாமஸ் பிரெட்மென் பகுதியில் அவர் இன்று எழுதிய கட்டுரை . அமெரிக்க வேலைவாய்ப்பு பெருக்கத்தில் சிறு நிறுவனங்கள் பங்கு பற்றியும் வெளிநாட்டினரின் பங்கு பற்றியும் உள்ளது. அதில் உள்ள செய்தி படி பார்த்தால் பன்னாட்டு நிறுவனங்கள் ஏற்படுத்தும் வேலை வாய்ப்பு பெரும் பாலும் கீழை நாடுகளில் தான் உள்ளது???. அக்கட்டுரையை தொடர்ந்து படிக்க இங்கு அழுத்தவும்

http://www.nytimes.com/2010/04/04/opinion/04friedman.html?hp

கடந்த வாரம் அவர் எழுதிய இந்த பதிவையும் படித்து பாருங்கள்


-