Sunday, August 30, 2009

வளரும் வங்கிகள்! இடம் மாறும் அதிகாரங்கள்?



முந்தைய பதிவுகளில் சீனா எவ்வாறு உற்பத்தி துறையில் போட்டியில்லாத வளர்ச்சி அடைய எடுக்கும் செயல்பாடுகள் பற்றி பார்த்தோம். இந்த பதிவில் அமெரிக்காவின் ஒட்டு மொத்த நிதித்துறை செயல்பாடுகளும் எவ்வாறு ஒரு சில கம்பெனிகளுக்கு போய் கொண்டிருக்கிறது மற்றும் அதனால் ஏற்பட கூடிய விளைவுகள் பற்றியும் என்று பார்ப்போம்.

தற்போதைய நிதி நெருக்கடி வந்த போது அமெரிக்கா எங்கும் பேசபட்டது 'Too Big to Fall'. அதாவது மிக பெரிய நிறுவனங்கள் வீழ்ந்தால் அதன் பாதிப்பு அதிகமாக இருப்பதால், அவர்கள் தவறு செய்து வீழ்ந்தாலும் காப்பாற்ற பட்டே ஆக வேண்டும் என்பது தான். நிதி நெருக்கடியிலிருந்து எழும் முன்னே தற்போது அமெரிக்க நிதி நிறுவனங்கள் நிலையை பார்ப்போம்.

கடந்த சூன் மாதம் பாங்க் ஆப் அமெரிக்கா, வெல்ஸ் பார்கோ மற்றும் ஜெ.பி. மார்கனிடம் மட்டும் 30 சதவிதத்துக்கும் மேலான அமெரிக்க டெப்பாசிட்டுகள் உள்ளன.இந்த மூன்று வங்கிகள் மற்றும் சிட்டி வங்கி ஆகியவையிடம் 50 சத மார்ட்கேஜ் பத்திரங்களும் மூன்றில் இரு கிரடிட் கார்டுகளும் உள்ளது.இதற்கு முக்கிய காரணம் நிதி நெருக்கடியின் போது பிரச்சனையில் உள்ள வங்கிகளை பெரிய வங்கிகள் வாங்கியது தான். கடந்த இரு வருடத்தில் பாங்க் ஆப் அமெரிக்கா 138%, ஜெ.பி.மார்கன் 51% மற்றும் வெல்ஸ் பார்கோ 43% வளர்ந்து உள்ளது. அமெரிக்க அரசு குறிபிட்ட இடத்தில் குறிபிட்ட சதவிதத்திற்கு மேல் டெபாசிட் வைக்க கூடாது என்று போட்டியை ஊக்க படுத்த வைத்துள்ள கட்டு பாட்டையும் மீறி இவ்வங்கிகள் வளர்ச்சி அடைந்து உள்ளது.

இதனால் ஏற்பட கூடிய விளைவுகளை பார்ப்போம். பொருளாதார மந்த நிலையிலேயே இந்த வளர்ச்சி என்றால் பொருளாதாரம் நல்ல நிலைக்கு வரும் போது அதன் வளர்ச்சியை பற்றி நினைத்து பாருங்கள். அது மட்டுமன்றி இந்நிறுவனக்களின் வளர்ச்சி மிக பெரியதாகி விட்டதால், இனி எக்காலத்திலும் இவற்றிற்கு அழிவு ஏற்பட போவது இல்லை என்ற நிலை ஏற்படும். எதாவது பிரச்சனை ஏற்பட்டால் தான் அரசு காப்பற்றி ஆக வேண்டுமே!. அதன் விளைவு, எந்த பயமும் இல்லாமல் முதலீட்டாளர்கள் நிறுவனங்களுக்கு தைரியமாக பணத்தை அள்ளி கொடுப்பார்கள். சிறு மற்றும் குறு நிதி நிறுவனங்களுக்கு முதலீடு கிடைப்பது குதிரை கொம்பாகும். எனவே பிற நிறுவனங்கள் அழிந்து விடும் அல்லது இப்பெரிய நிறுவனக்கள் அவற்றை வாங்கி விடும். இப்பெரும் நிறுவங்கள் மிகவும் அசாதாரமான வளர்ச்சி அடையும்.

மற்ற உற்பத்தி துறைகளில் ஒரு சிலரது ஆதிக்கம் இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் நிதி துறையின் பங்கு உலகில் விரல் விட்டு எண்ண கூடிய ஒரு சிலரது கைக்கு சென்றால் அதன் விளைவு கடுமையானதாக இருக்கும்.அது மட்டுமன்றி உலகில் பெரும்பான்மையான கடன்கள் குடுக்கும் அதிகரம் ஒரு சில நிறுவனக்களுக்கு மட்டும் இருந்தால் உலக சந்தையில் எந்த துறையிலும் எந்த நிறுவனம் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதும் ஒரு சிலரால் நிர்ணயிக்க படும்.போட்டிகள் குறைந்தால் சாதாரண மக்களுக்கும் அவர்களுக்கு சாதகமான வட்டி மற்றும் பிற காரணிகளில் கடன் கிடைப்பது கடினம். தற்போதைய சூழ்நிலையிலேயே பங்கு வர்த்தகத்தில் சர்வ சாதாரணமான ஏற்ற இறக்கத்தை இந்நிறுவனக்கள் ஏற்படுத்துகின்றன.இந்த நிறுவனங்களின் வளர்ச்சி மிக அதிகமானால், இந்த நிலை மோசமாகும்.வளரும் நாடுகளின் பொருளாதார ஸ்திரதன்மை கேள்வி குறியாகும்

இது போல் ஒரு சில நிறுவனங்கள் உலக பொருளாதாரத்தின் பெரும் பங்கை ஆட்டி வைக்க தொடங்கினால் அதிகாரம் எந்த அளவுக்கு அரசுகள் கையில் இருக்கும் என்பது சிந்திக்க வேண்டிய செய்தி.அப்படியே பணத்தை உருவாக்கும் அதிகாரமும் பெரிய நிறுவனக்களுக்கு போய் விட்டால்?!

--

3 comments:

Thomas Ruban said...

நல்ல அலசல், பதிவுக்கு நன்றி சார்.

//அப்படியே பணத்தை உருவாக்கும் அதிகாரமும் பெரிய நிறுவனக்களுக்கு போய் விட்டால்?!//

நம்முடைய கோவணத்தையும் விடமாட்டார்கள்.

நன்றி சார்.

Unknown said...

No need to think about it. Megacorporations are already well documented in science fiction. Scary as hell.

For starters try "Neuromancer" by William Gibson.

சதுக்க பூதம் said...

நன்றி Thomas Ruban .
Varun,
Neuromancer இதுவரை பார்க்க வில்லை. விரைவில் பார்க்கிறேன்.International என்ற் படமும் இதை பற்றியதே