Friday, January 02, 2009

2008ல் படிக்க மறந்த செய்தி

2008ல் எத்தனையோ சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் நடந்துள்ளன. பெரும்பாலான செய்தியை நாம் படித்திருப்போம். ஆனால் ஒரு சில சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் சிறு செய்தியாக வந்து நம் கண்ணுக்கு படாமல் இருக்க வாய்ப்புண்டு.நான் தற்போது படித்த இந்த செய்தி முன்பு என் கண்ணில் அகப்படவில்லை.செய்தி இது தான்...

அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஏவுகணை தாக்குதல் தடுப்பு உதவி(Missile Shield) ஒப்பந்தம் ஏற்படுவதற்கான முதற் கட்ட பேச்சு வார்த்தை தொடங்கி விட்டது. சென்ற வருடம் பிப்ரவரி மாதம் இந்தியா வந்த அமெரிக்க பாதுகாப்பு செக்ரட்டரி கேட்ஸ் இது பற்றிய பேச்சு வார்த்தையை தொடங்கி உள்ளார்.பிற்காலத்தில் சீனா இந்தியாவை தாக்கினால், அந்த நேரத்தில் இந்தியாவிற்கு உபயோகமாக இருக்கும் என்று கூற படுகிறது. அது போல அமெரிக்காவிற்கும் ,ஆசியாவில் சீனாவிற்கு எதிராக ஒரு பிடியாக கருதபடுகிறது.பின் வரும் காலங்களில் சீனா அமெரிக்காவிற்கு எதிராக பெரிய அளவில் நடவடிக்கை எடுத்தால் அமெரிக்காவிற்கும் இந்த ஒப்ப்ந்தம் உபயோகமாகயிருக்கும். இதனால் அமெரிக்கவும் பல கோடி மதிப்புள்ள ஆயுத தளவாடங்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்புண்டு.

விரிவான செய்திக்கு இங்கு சுட்டவும்

No comments: