Wednesday, January 14, 2009

நிதி நெருக்கடி- சில பாடங்கள் 2-கடன் தர சான்றிதழ்(Rating Agency) கொடுக்கும் அமைப்புகளின் செயல்பாடு

சோவியத் யூனியன் வீழ்ந்த பின் முதலாளித்துவம் உலகம் எங்கும் மிக வேகமாக பரவியது. சோவியத் யூனியன் இடத்தை இனி பிடிக்க போவது யார் என்று நினைத்த போது, பொருளாதார வல்லுனர்கள் கூறியது பான்டுகளை தர வரிசை படுத்தும் அமைப்புகள் என்றனர். அப்போது நகைச்சுவையாக கருதபட்டது தற்போது உண்மையாக மாற தொடங்கியது.

முதலில் தரவரிசை படுத்தும் நிறுவனங்கள் என்றால் என்ன என்று பார்ப்போம். ஒரு கடனை ஒரு முதலீட்டாளர் வாங்குகிறார் என்று வைத்து கொள்வோம். முதலில் அந்த கடனை வாங்கியவர் யார் என்று பார்க்க வேண்டும். பிறகு வாங்கியவரின் வருமானம் எவ்வளவு என்றும் அந்த வருமானத்தின் மூலம் என்ன? என்றும் பார்க்க வேண்டும்.ஒரே ஒரு கடன் என்றால் எளிதில் விசாரித்து விடலாம். பத்து பேர் வீட்டுகடன் வாங்குகிறார்கள் என்று வைத்து கொள்வோம். வங்கிகள் வீட்டுகடனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி விட்டு, அந்த கடன்கள் அனைத்தையும் ஒன்றாக்கி அந்த ஒன்று படுத்தபட்ட கடனை முதலீட்டு வங்கிகளுக்கு(Investment bank) விற்று விடும். அனைத்து கடனையும் இம்முதலீட்டு நிறுவனங்கள் சரி பார்ப்பது மிகவும் கடினமான செயல். பல கடன்களை ஒன்று சேர்த்து ஒரே கடனாக கொடுக்கும் போது எவ்வாறு அதை சரி பார்ப்பது? அங்கு தான் தரவரிசை படுத்தும் நிறுவனங்களின் சேவை வருகிறது. இது போன்ற கடனின் தன்மையை அராய்ந்து , அதன் சாதக பாதகங்களை சரிபார்த்து அதற்கு தர சான்றிதழ்களை அளிப்பது இந்த நிறுவனங்களின் வேலை.உதாரணமாக இது போன்ற நிறுவனங்கள் ஒரு கடனுக்கு "AAA" என்று சான்று அளித்தால் அந்த கடன்கள் மிகவும் நம்பகமானவை.அந்த கடனை வாங்கியவர்கள் நிச்சயம் திருப்பி கட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.இதை இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம்.AAA என்று தரவரிசை படுத்த பட்ட எந்த ஒரு கடனையும் முதலீட்டளர்கள் தைரியமாக முதலீடு செய்யலாம். ஒட்டுமொத்த அமெரிக்க பொருளாதார முதலீட்டு நிறுவனங்கள் அனைத்திற்கும் இந்த நிதி நிறுவன தரச்சான்றிதழ்கள் தான் அஸ்திவாரமாக உள்ளது.பென்சன் நிதி முதலீட்டு நிறுவனங்கள் போன்ற குறைவான் riskல் அதிக அளவு முதலீடு செய்யும் நிறுவங்கள், கடனின் riskஐ இது போன்ற தர நிர்ணயம் செய்யும் நிறுவங்கள் கொடுக்கும் சான்றிதழை கொண்டுதான் நிர்ணயிக்கின்றனர்.கடன் மட்டுமின்றி பத்திரம், கம்பெனி போன்ற பலவற்றிற்கும் இந்த நிறுவனங்கள் தர சான்றிதழ் அளிக்கும்.Moody's,Standard&Poor மற்றும் Fitch போன்ற நிறுவனங்கள் இதற்கு உதாரணம்.

அமெரிக்க பொருளாதாரத்தின் அச்சாணியாக உள்ள இந்த நிறுவனங்கள் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். ஆனால் நடந்ததோ வேறு.இந்த நிறுவங்கள் அதிக லாபத்துக்கு ஆசை பட ஆரம்பித்தன.இந்நிறுவங்களின் வாடிக்கையாளர்கள், கடனை தர வரிசை படுத்தி தர கேட்பவர்கள். எனவே வாடிக்கையாளர்களை திருப்தி படுத்தினால் தான் மீண்டும் தங்களிடம் வருவார்கள். மேலும் அதிக அளவு கட்டணமும் வசூலிக்க முடியும். அதன் விளைவு, தரசான்றிதழ் கேட்கபடும் கடன்கள் அனைத்தையும் முழுமையாக ஆராயாமல், AA மற்றும் AAA என சான்றிதழ்களை அடித்து தள்ளி விட்டனர்.இதன் மூலம் தர சான்றிதழ் கொடுக்கும் நிறுவனங்களின் லாபம் பல நூறு மடங்கு பெருகியது.
தனிபட்டவர்களுக்கு கடன் கொடுத்த வங்கிகளும், பணம் திரும்பி கிடைக்க பல ஆண்டு பொருத்திருக்காமல், முதலீட்டு நிறுவங்களுக்கு இந்த கடனை தர சான்றிதழ் காட்டி விற்று(Credit Dedault Swap), மேலும் மேலும் கடன் கொடுக்க தொடங்கியது. இந்த வகை அடமான கடனின் மதிப்பு, சில ட்ரில்லியன் டாலர்களை கடந்தது .அவற்றில் இருந்த பெரும்பாலான subprime கடன்களை வாங்கியவர்களின் நம்பகதன்மை மிகவும் குறைவாக இருந்தது. அவர்களுக்கு நிலையான வருமானமும் இல்லை.இருந்தாலும் அந்த கடனுக்கு மிகவும் அதிக தரவரிசை கொடுத்தனர். அமெரிக்க real estate வீழ தொடங்கிய போது இதுபோன்ற கடன்களை வாங்கியவர்கள் திருப்பி கொடுக்க முடியாத போது, அதில் முதலீடு செய்த நிறுவங்கள் படு பாதாளத்த்ற்கு விழ ஆரம்பித்தது.அது ஒட்டுமொத்த பொருளாதார வீழ்ச்சிக்கு வழிகோலியது.இது போன்ற நிறுவனங்களில், உண்மையை கூற முன் வந்த ஊழியர்களும் நீக்க பட்டனர்.நிறுவனங்கள் அதிக பத்திரங்களை கண்காணித்தாலும், குறைந்த அளவே ஊழியர்களை வைத்து லாப நோக்கில் செயல் பட்டனர்.
இனியாவது இது போன்ற நிறுவனங்களை அரசாங்கம் கண்கானித்து ஒழுங்கு படுத்துமா என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.


நிதி நெருக்கடி- சில பாடங்கள் 1-சந்தையில் அரசின் கட்டுப்பாடு


--

No comments: