Thursday, January 08, 2009

நிதி நெருக்கடி- சில பாடங்கள் 1-சந்தையில் அரசின் கட்டுப்பாடு

கடந்த சில மாதங்களாக உலகில் நடந்து வரும் பொருளாதார மாற்றங்கள், இதுவரை நடைமுறை உண்மைகளாக நம்பப்பட்டு வந்த அடிப்படை விதிகளை ஆட்டம் காண வைத்துள்ளது. வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாடுகளுக்கு இது நிறைய பாடங்களை நிகழ்காலத்திற்கு மற்றும் வருங்காலத்திற்கு அளித்துள்ளது. முக்கியமாக சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பிறகு, கட்டுபாடற்ற சந்தை பொருளாதாரம் தான் வளர்ச்சிக்கு ஒரே வழி என்று நம்பப்பட்டு வந்தது. அரசாங்களின் அதிகார எல்லை குறைக்கபட்டு கார்பரேட்டுகளின் எல்லை விரிவாக்க தொடங்கியது.வளர்ந்த நாடுகளில் இந்த மாற்றம் பல காலமாக இருந்தாலும், இந்த மாற்றத்தின் வேகம் சில காலமாக அதிகரிக்க தொடங்கியது. IMF மற்றும் உலக வங்கிகளின் மூலமாக இந்த மாற்றங்கள் வளரும் நாடுகளின் மீதும் திணிக்க பட்டுள்ளது.

சர்வதேச நிதி நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட சில விளைவுகளையும்,அது கொடுக்கும் சில பாடங்களையும் இனி வரும் சில பதிவுகளில் காண்போம்.

சந்தையில் அரசின் கட்டுப்பாடு

பொருளாதார சந்தையில் அரசின் கட்டுப்பாடு கூடாது என்றும் பொது சந்தையில் அரசின் தலையீடு இருக்க கூடாது (Free Market)என்றும், எந்த செயல் நடந்தாலும் அது நல்லதா அல்லது கெட்டதா என்பதை சந்தை தான் தீர்மானிக்க வேன்டும் என்றும் வளர்ந்த நாடுகள் கூறி வந்தன. கடந்த சில வருடங்களாக சந்தையில் பலவிதமான புதிய வகை விற்பனை பொருட்கள்(Credit Default Swap போன்றவை) அறிமுகபடுத்த பட்டு மிக அதிக ஆளவில் சந்தையில் கலக்க தொடங்கியது.அது போன்ற பொருட்கள் சந்தையில் எந்த அளவு பெருகி வருகிறது? அது சந்தையில் ஏற்படுத்த போகும் உண்மையான பாதிப்பு போன்றவற்றை அரசு கண்காணிக்க தவறியது.

கம்பெனிகளும் உண்மை நிலமையை மூடி மறைக்க தொடங்கியது. அதிக அளவு லாபம் ஏற்படுவதாக கணக்கு காட்டி,நிதி நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள் பல பில்லியன் டாலர்களை போனசாக பெற்றெனர்.அரசாங்கம் இது போன்ற நிகழ்வுகளை ஒழுங்காக
கண்காணித்திருந்தால் இது போன்ற தவறுகள் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க பட்டு, பிரச்சனை இந்த அளவு வராமல் தடுக்க பட்டிருக்களாம்.

நிதி நிறுவனங்களின் வளர்ச்சி அளவுக்கு மீறி இருந்த போது அமெரிக்க அரசு அதை எவ்வாறு கையான்டது என்று பார்த்தால் நகைச்சுவையாக இருக்கும்.அமெரிக்காவின் பொது சந்தையில் உள்ள Riskஐ கண்காணிக்கும் அமைப்பு Securities & Exchange Commission (SEC).பொருளாதாரமும் அதில் உள்ள complexity அதிகரிக்கும் போது அந்த நிறுவனத்தின் பணியாற்றும் கண்காணிப்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்க வேண்டும்.ஆனால் உண்மையில் நடந்ததோ வேறு. அந்நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை சில நூற்றிலிருந்து வெறும் ஒன்றாக குறைக்க பட்டுள்ளது.நீங்களே நினைத்து பாருங்கள், ஒரே ஒருவர் உலக பொருளாதாரத்தையே எவ்வாறு கண்காணிக்க முடியும் என்று?

செனட் விசாரணையில் நடந்த உரையாடல் இங்கே

In recent testimony under oath by Mr Lynn Turner, Chief Accountant of the Securities & Exchange Commission (SEC) testified that the SEC Office of Risk Management which had oversight responsibility for the Credit Default Swap market, an exotic market worth nominally some $62 trillions, was cut in Administration ‘budget cuts’ from a staff of one hundred down to one person. Yes, that was not a typo. That’s one as in ‘Uno.’

Vermont Democratic Congressman Peter Welsh queried Turner, ‘... was there a systematic depopulating of the regulatory force so that it was impossible actually for regulation to occur if you have one person in that office? ...and then I understand that 146 people were cut from the enforcement division of the SEC, is that what you also testified to?’ Mr. Turner, in Congressional testimony replied, ‘Yes…I think there has been a systematic gutting, or whatever you want to call it, of the agency and it's capability through cutting back of staff.’

இதே அமெரிக்க ஊடகங்கள்தான் இந்தியாவில், அரசு சந்தையை கண்காணிப்பதும் கட்டுபடுத்துவதும் தவறு என்று கூறி வந்துள்ளது.தற்போது மேல்நாட்டு கம்பெனிகள் இந்திய பங்கு சந்தையில் அதிக அளவு செயல்பட ஆரம்பித்துள்ளனர். எனவே தவறுகள் நிறைய நடக்க சாத்திய கூறுகள் உள்ளது.எனவே அரசும் கண்காணிப்பை அதிக படுத்த வேண்டிய நேரம் வந்துள்ளது.

1930களில் நடைபெற்ற மாபெரும் பொருளாதார நெருக்கடியில் கற்ற பாடங்களின் அடிப்படையில், மக்களின் நன்மைக்காகவும், சந்தையின் நன்மைக்காகவும் பல முக்கிய கட்டுபாட்டு சட்டங்கள்(Glass-Steagall Act of 1933) இயற்றப்பட்டன.50 ஆண்டுகளாக அந்த சட்டங்களும் நன்றாக செயல் படுத்த பட்டு பெரிய விபரீதங்கள் நடைபெறாமல் தடுக்க பட்டு வந்தது. ஆனால் ரீகன் ஆட்சி காலத்திலிருந்து கட்டுபாடுகள் சிறிது சிறிதாக தளர்த்தப்பட ஆரம்பிக்கப்பட்டது. கிளின்டன் காலத்தில் அதில் பெரிய அளவு கட்டுபாடுகள் தளர்த்த பட்டது.கட்டுபாடுகளை தளர்த்த நிதி நிறுவன லாபிக்கள் சுமார் $200 மில்லியன் செலவு செய்துள்ளனர்.அதன் விளைவு பல ட்ரில்லியன் டாலர் இழப்பு உலகத்துக்கும், பல பில்லியன் டாலர்கள் லாபமாக நிதி நிறுவன நிர்வாகிக்களுக்கும் கிடைத்தது.

அடுத்த பதிவில் கடன் தரச்சான்றிதழ்(Credit Rating Agency) கொடுக்கும் நிறுவனங்களின் பங்கு பற்றி காண்போம்


--

No comments: